விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை : விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த செப் 2ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோவை : விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த செப் 2ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படு கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாநகரில்‌ வருகிற 6ம்‌ தேதி காலை 10 மணி முதல்‌ விநாயகர்‌ சிலை ஊர்வலமானது பின்வருமாறு நடைபெற உள்ளது :

1. இந்து மக்கள்‌ கட்சியின்‌ (தமிழகம்‌! விநாயகர்‌ சிலை ஊர்வலம்‌ காலை 10 மணிக்கு ராஜவீதி தேர்நிலைத்‌ திடலிலிருந்து புறப்பட்டு ராஜ வீதி. ஆர்‌.ஜி.வீதி சுக்கீரவார்‌ பேட்டை தியாகி குமரன் வீதி. இடையர்‌ வீதி. கே.ஜி. வீதி, வைசியாள்‌ வீதி. சலிவன்‌ வீதி , காந்திபார்க்‌. தடாகம்‌ ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

2. இரண்டாவதாக அகில பாரத அனுமன்‌ சேனா (ஸ்ரீதரன்‌) அமைப்பின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ காலை 10 மணிக்கு ராஜவீதி தேர்நிலைத்‌ திடலிலிருந்து புறப்பட்டு ராஜ வீதி. கே.ஜி. வீதி. வைசியாள்‌ வீதி, சலிவன்‌ வீதி, காந்திபார்க்‌. சுப்பிரமணியம்‌ சாலை, வெங்கடகிருஷ்ணா ரோடு வழியாக முத்தணணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

3. மூன்றாவதாக பாரத்‌ சேனா அமைப்பின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ மதியம்‌ 12 மணிக்கு அவானந்தா காலனியில்‌ இருந்து புறப்பட்டு 100 அடி ரோடு, லீலா மருத்துவமனை. சோபிகா கார்னர்‌. கிராஸ்கட்‌ ரோடு. வடகோவை மேம்பாலம்‌, சிந்தாமணி, புரூக்பாண்ட்‌ ரோடு. தேவாங்கப்பேட்டை ரோடு. பூமார்க்கெட்‌, சுக்கிரவார்‌ பேட்டை காந்திபார்க். தடாகம்‌ ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

4. நான்காவதாக அகில பாரத அனுமன்‌ சேனா அமைப்பின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ மதியம்‌ 1 மணிக்கு சாஸ்திரி மைதானத்திலிருந்து புறப்பட்டு டி.பி ரோடு, மெக்ரிக்கர்‌ ரோடு. பூமார்கெட்‌, சுக்கிரவார்‌ பேட்டை, தியாகி குமரன்‌ வீதி, இடையர்‌ வீதி, கருப்பகவுண்டர்‌ வீதி, வைசியாள்‌ வீதி, சலிவன்‌ வீதி, காநீதியார்க்‌. கப்ரமணியம்‌ ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு. வழியாக முத்தணணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

5. ஐந்தாவதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ மதியம்‌ 1 மணிக்கு வைசியாள்‌ வீதி -சலிவன்‌ வீதி பருப்பு குடோன்‌ சந்திப்பிலிருந்து புறப்பட்டு செட்டி வீதி, சலிவன்‌ வீதி. ராஜ வீதி, ஆர்‌.ஜி.வீதி. சுக்கிரவார்‌ பேட்டை. காந்திபார்க்‌. தடாகம்‌ ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

6. ஆறாவதாக விவேகானந்தர்‌ பேரவையின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ மதியம்‌ 2.30 மணிக்கு பெரிய கடை வீதி மாகாளியம்மன்‌ கோவில்‌ திடலில்‌ இருந்து புறப்பட்டு பெரிய கடை விதி. ஆர்.ஜி.வீதி, வைசியாள்‌ வீதி, சலிவன்‌ வீதி. காந்திபார்க்‌. தடாகம்‌ ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

7. ஏழாவதாக சிவசேனா அமைப்பின்‌ விநாயகர்‌ ஊர்வலம்‌ மதியம்‌ 2 மணிக்கு ஆர்‌.எஸ்‌ புரம்‌, லைட்ஹவுஸ்‌ வீதியிலிருந்து புறப்பட்டு டி பி ரோடு. மெக்ரிக்கர்‌ ரோடு, பூமார்க்கெட்‌, சுக்கிரவார்பேட்டை. டிகே வீதி, இடையர்‌ வீதி, கருப்பகவுண்டர்‌ வீதி, வைசியாள்‌ வீதி. சலிவன்‌ வீதி. காந்திபார்க், சுப்ரமணியம்‌ ரோடு, வெங்கிட கிருஷ்ணா ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

8. எட்டாவதாக இந்து முன்னணி அமைப்பின் விநாயகர் ஊர்வலம் 4 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் தொடங்கி லிங்கப்பட்டி, செட்டி வீதி, விசிவி லேஅவட், தேவாங்கபேட்டை ரோடு, பூ மார்க்கெட், ரங்கே கவுடர், இடையர் வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள்‌ வீதி. சலிவன்‌ வீதி. காந்திபார்க், சுப்ரமணியம்‌ ரோடு, வெங்கிட கிருஷ்ணா ரோடு வழியாக முத்தண்ணன்‌ குளம்‌ சென்றடைகிறது.

மேலே கண்ட இடங்கள்‌ வழியாக விநாயகர்‌ ஊர்வலம்‌ செல்லவிருப்பதால்‌ காலை 10 மணி முதல்‌ இரவு 8 மணி வரை கீழ்கண்டாவறு போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளன :

1.உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர்‌ மார்க்கமாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர்‌ பைபாஸ்‌ ரோடு, செல்வபுரம்‌, சிவாலயா தியேட்டர்‌ சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

2. காந்திபுரம்‌ மற்றும்‌ டவுன்ஹாலில்‌ இருந்து வைசியாள்‌ வீதி சலிவன்‌ வீதியில்‌ செல்லும் வாகனங்கள்‌ உக்கடம்‌ சென்று வலது புறம்‌ திரும்பி பேரூர்‌ பைபாஸ்‌ ரோடு, சிவாலயா தியேட்டர்‌ சந்திப்பு வழியாக செல்வபுரம்‌ சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்‌.

3. உக்கடம்‌ வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ சுங்கம்‌ பைபாஸ்‌ வழியாக சுங்கம்‌ சந்திப்பு அடைந்து திருச்சி சாலையில்‌ செல்ல வேண்டும்‌.

4. உக்கடம்‌ வழியாக மேட்டுப்பாளையம்‌ சாலை மற்றும்‌ தடாகம்‌ சாலை செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, இரயில்‌ நிலையம்‌ வழியாக காந்திபுரம்‌ சென்று செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்‌.

5. தடாகம்‌ ரோட்டில்‌ இருந்து நகருக்குள்‌ வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ வெங்கட்டா புரம்‌ சந்திப்பில்‌ இடதுபுறம்‌ திரும்பி என்.எஸ்.ஆர் ரோடு வழியாக மேட்டுப்பாளையம்‌ ரோடு. ஏ.ஆர்‌.சி சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்‌.

6. மேட்டுப்பாளையத்தில்‌ இருந்து நகருக்குள்‌ வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ சங்கனூர்‌ பாலம்‌ சந்திப்பில்‌ இடதுபுறம்‌ திரும்பி கணபதி காந்திபுரம்‌ வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்‌.

7. மேட்டுப்பாளையத்தில்‌ இருந்து நகருக்குள்‌ வரும்‌ வாகனங்கள்‌ விநாயகர்‌ சிலை ஊர்வலம்‌ வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல்‌ தியேட்டரை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம்‌ வழியாக காந்திபுரம்‌ செல்ல வேண்டும்‌.

8. பேரூரில்‌ இருந்து நகருக்குள்‌ வரும்‌ அனைத்து பேருந்துகள்‌ மற்றும்‌ வாகனங்களும்‌ பேரூர்‌ ரோடு செல்வபுரம்‌ மேல்நிலைப் பள்ளி அருகில்‌ வலது பக்கம்‌ திரும்பி பேரூர்‌ புறவழிச்சாலை வழியாக உக்கடம்‌ அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச்‌ செல்ல வேண்டும்‌.

விநாயகர்‌ ஊர்வலத்தை முன்னிட்டு பொதுமக்கள்‌ நலன்‌ கருதி 06.09.2019 அன்று காலை 8 மணி முதல்‌ இரவு 8 மணி வரை நகருக்குள்‌ லாரிகள்‌ இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலே கண்ட சாலைகள்‌ வழியாக விநாயகர்‌ சிலை ஊர்வலம்‌ செல்ல இருப்பதால்‌ ஊர்வலப்பாதையில்‌ இருக்கும்‌ வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ தங்களது வாகனங்களை மேற்படி பாதையில்‌ நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...