ஸ்வச்‌ சுரேக்ஷன்‌ கிராமீன்‌ செயலி மூலம் சுகாதார நிலை குறித்து பொதுமக்கள்‌ கருத்து பதிவிடலாம்‌ : மாவட்ட ஆட்சியர்

கோவை : ஸ்வச்‌ சுரேக்ஷன்‌ கிராமீன்‌ செயலி என்ற மொபைல்‌ செயலி பதிவிறக்கம்‌ செய்து, கிராம ஊராட்சிகளில்‌ உள்ள சுகாதார நிலை குறித்து தங்கள்‌ கருத்துகளை பொதுமக்கள்‌ பதிவிடலாம்‌ என்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி தெரிவித்தார்.

கோவை : ஸ்வச்‌ சுரேக்ஷன்‌ கிராமீன்‌ செயலி என்ற மொபைல்‌ செயலி பதிவிறக்கம்‌ செய்து, கிராம ஊராட்சிகளில்‌ உள்ள சுகாதார நிலை குறித்து தங்கள்‌ கருத்துகளை பொதுமக்கள்‌ பதிவிடலாம்‌ என்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி தெரிவித்தார்.

மத்திய அரசின்‌ குடிநீர்‌ மற்றும்‌ சுகாதார அமைச்சகத்தினால்‌ தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்‌-2019 ஸ்வச்‌ சுரேக்ஷன்‌ கிராமீன்படி தற்போதுள்ள சுகாதாரத்தின்‌ தரம்‌ மற்றும்‌ சுகாதார கட்டமைப்பில்‌ அமைந்துள்ள முன்னேற்றத்தின்‌ அடிப்படையில்‌ இந்தியாவில்‌ உள்ள மாநிலங்கள்‌ மற்றும்‌ மாவட்டங்கள்‌ தரவரிசைப்படுத்தப்பட உள்ளது.

எனவே, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தினை தரவரிசையில்‌ முதன்மை மாவட்டமாக கொண்டு வர ஸ்வச்‌ சுரேக்ஷன்‌ கிராமீன்‌ என்ற மொபைல்‌ செயலி பதிவிறக்கம்‌ செய்து, கிராம ஊராட்சிகளில்‌ உள்ள சுகாதார நிலை குறித்து தங்கள்‌ கருத்துகளை பொதுமக்கள்‌ பதிவிடலாம்‌. என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ தூய்மை தொடர்பாக பல்வேறு கட்டமைப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு கழிவறை பயன்பாடு உறுதி செய்யப்படுவதுடன்‌ திடக்கழிவு மேலாண்மை திட்டம்‌ தூய்மை காவலர்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்‌ திரவகழிவு மேலாண்மை உரக்குழி மூலம்‌ ஊராட்சிகளில்‌ உள்ள இல்லங்களுக்கு இலவசமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்‌ ரூ.8,500/- மதிப்பீட்டில்‌ செய்து தினமும்‌ 200 லிட்டர்‌ முதல்‌ 250 லிட்டர்‌ வரை தண்ணார்‌ சேமிக்கப்படுகிறது. இதனடிப்படையில்‌ மாநில அளவில்‌ சுகாதார நிலை குறித்து மாவட்டங்களை தர வரிசைப்படுத்தப்பட உள்ளது.

எனவே கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ சுகாதார நிலை குறித்து பொதுமக்கள்‌ தங்களது கருத்துகளை ஆன்லைன் வாயிலாக (Survekshan Grameen-2019) என்ற மொபைல்‌ செயலியை பயன்படுத்தி பதிவிட்டு கோயம்புத்தூர்‌ மாவட்டத்தினை தரவரிசையில்‌ முதன்மை மாவட்டமாக கொண்டு வர அனைவரும்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...