முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

கோவை : சர்வதேச முதியோர்‌ தினவிழாவை முன்னிட்டு, முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள்‌ மற்றும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : சர்வதேச முதியோர்‌ தினவிழாவை முன்னிட்டு, முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள்‌ மற்றும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும்‌ அக்டோபர்‌ முதல்‌ நாளன்று சர்வதேச முதியோர்‌ தினவிழா மாநில அளவில்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே 2019ம்‌ ஆண்டில்‌ முதியோர்‌ நலனில்‌ அக்கறை கொண்டும்‌, ஆதரவு அளித்தும்‌ சிறப்பாக செயல்படும்‌ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனிநபர்களை தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ்‌ வழங்கும்பொருட்டு முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள்‌ மற்றும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

மேற்படி, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கருத்துக்கள்‌ 15.09.2019 மாலை 5 மணிக்குள்‌ மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்‌ செயல்படும்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தில்‌ சமாப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...