அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கோவை : கோயம்புத்தூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போன் அபியான் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களின் கைபேசியில் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும், என மாவட்ட ஆட்சியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை : கோயம்புத்தூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போன் அபியான் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களின் கைபேசியில் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும், என மாவட்ட ஆட்சியாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போன் அபியான் திட்டத்தின் கீழ் 01.09.2019 முதல் கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய ஊட்டச்சத்து குழுமம் 3-வது கட்டமாக செயல்படுத்திடவும், இத்திட்டம் சார்ந்த 1800 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசி வழங்கப்பட்டுள்ளது." 

"மேற்கண்ட கைபேசியில் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்துப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் குறித்து கேட்கப்படும் குடும்ப நிர்வாகம் குறித்த கணக்கெடுப்பு, தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வை திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லும் இணை உணவு, வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி பற்றிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, வளரிளம் பெண்கள், கர்ப்பகால பராமரிப்பு, பாலுட்டும் தாய்மார்கள் குறித்த கணக்கெடுப்பு ஆகிய விவரங்களை கைபேசியில் பதிவு மேற்கொண்டு திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்ளப்படுகிறது", என தெரிவித்துள்ளார். 

மேலும், பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...