மேட்டுப்பாளையம் உதகை இடையே சிறப்பு மலை ரயில் போக்குவரத்து அடுத்தமாதம் 5 ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை : நீலகிரி மலை ரயில் போக்குவரத்தில் காலதாமதமின்றி அனைவரும் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றும் ஊட்டியில் இரண்டாவது மலர் கண்காட்சி சீசனுக்காவும், அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு மலை ரயில் சேவையை துவக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : நீலகிரி மலை ரயில் போக்குவரத்தில் காலதாமதமின்றி அனைவரும் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றும் ஊட்டியில் இரண்டாவது மலர் கண்காட்சி சீசனுக்காவும், அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு மலை ரயில் சேவையை துவக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கபட்டு வருகிறது. காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறபட்டு அடர்ந்த காடுகளின் நடுவே பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணித்து ஆர்பரிக்கும் அருவிகள் வானுயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் என கொட்டி கிடக்கும் நீலமலையின் இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மற்றும் இன்றி பல்வேறு வெளிநாட்டினரும் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உள்ள இந்த மலை ரயில் போக்குவரத்தானது நான்கு பெட்டிகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால் இதில் 150 பயணிகளுக்கு மேல் செல்ல முடியாது. தினசரி ஒரு ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து பல மாதங்கள் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். 

தெற்கு ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்பை தொடர்ந்து, தினசரி இயக்கப்படும் மலை ரயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சென்றபின் இந்த மலை ரயில் காலை 9.10 க்கு புறப்பட்டு உதகை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வாரத்தின் இரண்டு விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு இந்த மலை ரயில் சிறப்பு கட்டணத்தில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...