பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகள்‌ பங்கு பெற்று பயனடைலாம்‌ - ஆட்சியர் அறிவிப்பு

கோவை : கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஓய்வூதிய திட்டத்தில்‌, தகுதிவாய்ந்த 18 -40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள்‌ பங்கு பெற்று பயனடைலாம்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌, கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஓய்வூதிய திட்டத்தில்‌, தகுதிவாய்ந்த 18 -40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள்‌ பங்கு பெற்று பயனடைலாம்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌, கு.இராசாமணி தெரிவித்துள்ளார். 

கிராமங்களில் உள்ள அணைத்து விவசாகிகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இனி வரும் 100 நாட்களில் 1 கோடி விவசாகிகளை இணைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் கூறியுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆப., அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:

பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா என்னும்‌ சிறு குறு விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதியத்‌ திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில்‌, இணைக்கப்படவுள்ள சிறு குறு விவசாயிகள்‌ 60 வயது பூர்த்தியடையும்‌ நிலையில்‌ ஒய்வூதியம்‌ வழங்கிடவும்‌ இதற்கென மத்திய அரசின்‌ வேளாண்‌ கூட்டுறவுத்துறை மற்றும்‌ விவசாயிகளின்‌ நலன்கள்‌ துறையும்‌ ஆயுள்‌ காப்பீட்டு கழகம்‌ இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

சிறு குறு விவசாயிகள்‌ செலுத்தும்‌ ஒய்வூதிய காப்புறுதி தவணை கட்டணத்திற்குச்‌ சமமாக மத்திய அரசும்‌ தனது பங்குத்தொகையினை இந்த ஓய்வுதிய திட்டத்திற்கு வழங்க உள்ளது. இதன்படி தகுதிவாய்ந்த 18-40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள்‌ அவர்களின்‌ வயதிற்கேற்ப தன்னார்வத்துடன்‌ à®‡à®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯‌ இணைந்து தங்களது வயதிற்கு ஏற்ப மாதம்‌ ரூ.50 முதல்‌ ரூ.200 வரை காப்பீடு கட்டணம்‌ செலுத்தும்‌ நிலையில்‌ 60 வயது நிறைவடையும்‌ à®ªà¯‹à®¤à¯ மாதத்திற்கு ரூ.3000/- (ரூபாய்‌ மூவாயிரம்‌ மட்டும்‌) ஓய்வூதியமாக வழங்கப்படவுள்ளது.

மேலும், எதிர்பாராத விதமாக பணம்‌ கட்டும்‌ விவசாயி இறந்து விட்டால்‌ அவரது வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து மாதந்தோறும்‌ ரூ.1500/- ஓய்வூதியமாக கிடைக்கும்‌. விவசாயிகள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில்‌ தொடர விருப்பம்‌ இல்லையென்றால்‌ கட்டிய பணத்தினை வட்டியுடன்‌ திரும்ப பெறும்‌ வசதியும்‌ உள்ளது.

ஓய்வூதிய காப்புறுதி கட்டணத்தினை மாதந்தோறும்‌ குறிப்பிட்ட நாளில்‌ அல்லது காலாண்டு அரையாண்டு, ஆண்டு தவணையாக செலுத்திடலாம்‌.

இதனை, தங்களுக்கு வங்கி கணக்கிலிருந்து ஆட்டோடெபிட்‌ முறையிலோ அல்லது ஏற்கனவே பிரதம மந்திரி கிஸான்‌ சமான்‌ நிதி திட்டத்தில்‌ இணைந்திருப்பின்‌ அதிலிருந்தோ செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகள்‌ 60 வயது நிரம்பியபின்‌ இந்த ஒய்வூதிய திட்டத்திலிருந்து மாதந்தோறும்‌ ரூ.3000/- விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌. 

தகுதிவாய்ந்த சிறு குறு விவாசாயிகள்‌ தங்களது அருகிலுள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு தங்களது ஆதார்‌ கார்டு வங்கி கணக்கு விவரங்கள்‌ அளித்து கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளாம்‌. 

கீழ்காணும்‌ விபரங்கள்‌ நேரடியாக இதற்கென உள்ள தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌. பெயர்‌ ஆதார்‌ என்‌, பிறந்த தேதி, துணைவன்‌, துணைவி பெயர்‌ வாரிசுதாரர்‌ போன்‌ எண்‌ போன்ற விபரங்கள்‌ தேவைப்படும்‌. தங்களது வங்கி கணக்கிலிருந்து மாத/காலாண்டு/அரையாண்டு/ வருட தவணை குறிப்பிட்ட நாளில்‌ எடுத்துக்‌ கொள்ள வழிவகை செய்ய்பட்டுள்ளது. 

இதனை பொது சேவை மையத்திலுள்ள அலுவலர்‌ பதிந்து கையொப்பம்‌ பெற்று முதல்‌ தவணை விபரங்களுடன்‌ பதிந்து இரசீது வழங்குவர்‌. பதிவு செய்பவருக்கு, பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஒய்வூதிய திட்ட அடையாள அட்டை மற்றும்‌ ஒய்வூதிய கணக்கு எண்ணுடன்‌ வழங்கப்படும்‌. 

எனவே, இத்திட்டத்தில்‌ அனைத்து சிறுகுறு விவாசாயிகளும்‌ தங்களது பகுதியில்‌ உள்ள பொது சேவை மையத்தினை அணுகி இலவசமாக à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯‌ இணைந்து பயன்பெறுமாறும்‌ மேலும்‌ தொடர்புக்கு தங்கள்‌ பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு திட்டம்‌ à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà®¾à®© விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

மாதாந்திர பிரிமியம்‌ விவரம்: 

18வயதிற்கு ரூ.55/-

19வயதினருக்கு ரூ.58/-

20வயதினருக்கு ரூ.61/-

21வயதினருக்கு ரூ.64/-

22வயதினருக்கு ரூ.68/- 23வயதினருக்கு ரூ.72/-

24வயதினருக்கு ரூ.76/- 25வயதினருக்கு ரூ.80/- 26வயதினருக்கு ரூ.85/- 27வயதினருக்கு ரூ.90/- 28வயதினருக்கு ரூ.95/- 29வயதினருக்கு ரூ.100/- 30வயதினருக்கு ரூ.105/- 31வயதினருக்கு ரூ.110/-

32வயதினருக்கு ரூ.120/-

33வயதினருக்கு ரூ.130/- 34வயதினருக்கு ரூ.140/- 35வயதினருக்கு ரூ.150/- 36வயதினருக்கு ரூ.160/-

37வயதினருக்கு ரூ.170/- 38வயதினருக்கு ரூ.180/- 39வயதினருக்கு ரூ.190/-

40வயதினருக்கு ரூ.200/- 

மாதாந்திர பிரீமியம்‌ தொகையாக வழங்கப்படும்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...