பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் வராம் முதல் மீண்டும் துவக்கம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது.

கோவை : à®•ோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. 

இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாகவே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் பாதுகாப்பு கருதி கடந்த ஒன்னரை மாதங்களாக பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யபட்டிருந்தது.



இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக படிப்டியாக மழை குறைந்து பில்லூர் அனைக்கான நீர் வரத்து 1000 கன அடியாக குறைந்ததால் அனையின் நீர் மட்டம் தற்போது 88 அடியாக உள்ளது.

எனவே, வரும் வாரம் முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலா வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பூச்சிமரத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் வனத்துறை தங்கும் விடுதியும் வழக்கம் போல் செயல்படுவதாகவும் அதில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் துவங்கபட்டுள்ளதாக காரமடை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...