தீபாவளி பண்டிகைக்கு தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர்

கோவை : 2019 ஆம்‌ ஆண்டில்‌ தீபாவளி பண்டிகை எதிர்வரும்‌ அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில்‌, கோவை மாவட்டத்தின்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக்கடைகள்‌ நடத்திட விருப்பம்‌ உள்ளவர்கள்‌, வெடிபொருள்‌ சட்டவிதிகள்‌ 2008-ன்‌ கீழ்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலரிடம்‌ தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ தமிழ்நாடு அரசு உத்தரவின்‌ படி நடப்பு ஆண்டு முதல்‌ ஒற்றை சாளரமுறையில்‌ (Single Window System) பெற்றிட வேண்டும்‌, என்பதன்‌ அடிப்படையில்‌ இணையவழியாக விண்ணப்பங்கள்‌ கடந்த ஆகஸ்ட் 31 வரை பெறப்பட்டது.

கோவை : 2019 ஆம்‌ ஆண்டில்‌ தீபாவளி பண்டிகை எதிர்வரும்‌ அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில்‌, கோவை மாவட்டத்தின்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக்கடைகள்‌ நடத்திட விருப்பம்‌ உள்ளவர்கள்‌, வெடிபொருள்‌ சட்டவிதிகள்‌ 2008-ன்‌ கீழ்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலரிடம்‌ தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ தமிழ்நாடு அரசு உத்தரவின்‌ படி நடப்பு ஆண்டு முதல்‌ ஒற்றை சாளரமுறையில்‌ (Single Window System) பெற்றிட வேண்டும்‌, என்பதன்‌ அடிப்படையில்‌ இணையவழியாக விண்ணப்பங்கள்‌ கடந்த ஆகஸ்ட் 31 வரை பெறப்பட்டது.

வணிகர்களின்‌ கோரிக்கையை தொடர்ந்து கூடுதல்‌ முதன்மை செயலாளர்‌ / வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ படி மேற்படி உரிமத்தினைப்‌ à®ªà¯†à®±à¯à®µà®¤à®±à¯à®•ென தங்களது விண்ணப்பத்தினை செப்டம்பர் 28-ஆம்‌ தேதி வரை இ-சேவை மையங்கள்‌ மூலம்‌ கீழ்கண்ட ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

1. தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம்‌ கோரும்‌ புலம்‌ 9 ச.மீ முதல்‌ 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும்‌, புலத்தினை குறிக்கும்‌ புலவரைபடத்தில்‌ à®šà®¾à®²à¯ˆ வசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும்‌ கடையின்‌ கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டூக்காட்டூம்‌ (Sub rule-3) புலவரைபடம்‌.

2. உரிமம்‌ கோரும்‌ இடத்தின்‌ உரிமையாளர்‌ மனுதாரராக இருப்பின்‌, அதற்கான ஆவணங்கள்‌ மற்றும்‌ நடப்புநிதி ஆண்டில்‌ வீட்டுவரி செலுத்திய இரசீது நகல்‌.

3. வாடகைக்‌ கட்டிடம்‌ எனில்‌, உரிமையாளர்‌ வீட்டுவரி செலுத்திய அசல்‌ இரசீது நகலுடன்‌, கட்டிட உரிமையாளரிடம்‌ ரூ.20/-க்கான முத்திரைத்தாளில்‌ பெறப்பட்ட அசல்‌ சம்மதக்‌ கடிதம்‌.

4. உரிய தலைப்பின்‌ கீழ்‌ அரசுக்‌ கணக்கில்‌ உரிமக்‌ கட்டணம்‌ ரூ.500/- அசல்‌ செலுத்துச்‌ சீட்டு.

5. மனுதாரரின்‌ மார்பளவு பாஸ்போர்ட்‌ அளவுள்ள வண்ண புகைப்படங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்.

6. மனுதாரரின்‌ அசல்‌ நிரந்தர கணக்கு எண்‌ (Pan Card), ஆதார்‌ கார்டு, குடும்ப அட்டை / ஸ்மார்ட்‌ கார்டு.

தற்காலிகப்‌ பட்டாசு உரிமம்‌ பெற மாண்பமை உயர்நீதிமன்ற - தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்‌ : 

1) பட்டாசு கடைகளில்‌ மேல்மாடியில்‌ குடியிருப்பு மற்றும்‌ பட்டாசு இருப்பு இருத்தல்‌ கூடாது.

2) பட்டாசு கடையின்‌ அருகில்‌ மருத்துவமனைகள்‌, பள்ளிகள்‌, வழிபாட்டூத்தலங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ எளிதில்‌ தீப்பற்றும்‌ பொருட்கள்‌ உள்ள பகுதிகள்‌/கட்டிடங்கள்‌ இருத்தல்‌ கூடாது.

3) பொதுமக்கள்‌ கூடும்‌ பகுதிகள்‌, "பேருந்து நிறுத்தம்‌, கக நிலையங்கள்‌ அருகில்‌ பட்டாசு கடை அமைத்தல்‌ கூடாது.

4) பட்டாசுகடையின்‌ கட்டிடத்தில்‌ கண்டிப்பாக இரண்டூ வழிகள்‌ இருக்க வேண்டும்‌. அதில்‌ அவசரக்காலவழி கடையின்‌ வெளிச்செல்லும்படி இருத்தல்‌ வேண்டும்‌.

5) கட்டிடம்‌ தார்சு வகை (R.c.Roofing) மேல்கூரையாக அமைந்திருதீதால்‌ சுற்றளவில்‌ 15 மீட்டருக்கு அதே வகை பட்டாசு கடை இருக்க கூடாது.

6) கட்டிடத்தின்‌ பரப்பளவு Explosive Rule 2008ன்‌ விதியில்‌ தெரிவித்துள்ளபடி அதன்‌ அளவிற்கு உட்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌ (9 sq.mt. to 25sq.mt).

7)காலிஇடத்தில்‌ தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்‌ போது 50 மீட்டார்‌ சுற்றளவுக்கு காலியிடம்‌ இருக்க வேண்டும்‌. இரண்டு வழிகள்‌ கட்டாயம்‌ அமைக்கப்பட வேண்டும்‌.

8) பட்டாசு கடை வைக்க கோருமிடத்திற்கு கதவு எண்ணுடன்‌ கூடிய விலாசம்‌ விண்ணப்பத்தில்‌ கட்டாயம்‌ குறிப்பிடப்பட வேண்டும்‌.

9) திருமண மண்டபங்கள்‌, அரங்கங்கள்‌, சமுதாய கூடங்கள்‌ ஆகிய கட்டிடங்களில்‌ பட்டாசு கடை அமைக்க கூடாது.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து விண்ணப்பம்‌ செய்யுமாறு விண்ணப்பதாரா்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப்‌ பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்களும்‌, நிபந்தனைகள்‌ கடைபிடிக்காத விண்ணப்பங்களும்‌ நிர்வாக காரணங்களினால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது என இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. 

இக்கால நீட்டிப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு வணிகர்கள்‌/விற்பனையாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றனர்‌, இப்படிக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...