மின்கட்டணத்தை முன்கூட்டியே வசூல்‌ மையங்களிலும்‌. இணையதள வாயிலாகவும்‌ செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

வீடு மற்றும்‌ வர்த்தக நிறுவனங்கள்‌ முதலிய தாழ்வளுத்த மின்நுகர்வோர்கள்‌ தங்களின்‌ மின்கட்டணத்தை முன்கூட்டியே கட்டினால் வட்டி வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

வீடு மற்றும்‌ வர்த்தக நிறுவனங்கள்‌ முதலிய தாழ்வளுத்த மின்நுகர்வோர்கள்‌ தங்களின்‌ மின்கட்டணத்தை முன்கூட்டியே கட்டினால் வட்டி வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்த கூடுதல் தொகையை மின்கட்டண வசூல்‌ மையங்களிலும்‌. இணையதள வாயிலாகவும்‌ செலுத்தும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது, என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

மாதாந்திர மின்சாரக் கணக்கு எடுப்பதற்கு முன்னரே தங்களின் மின் கட்டணத்தை கூடுதலாக செலுத்திவிட்டால், அதற்கு உண்டான லாபத்தை கணக்கிட்டு வட்டியை வழங்க தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது, வரும் 2019-20ஆம் நிநியாண்டில் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ள நிலையில், மின்கட்டண முன் பணம்‌ செலுத்துவதால்‌ ஏற்படும் பயன்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

1. உரிய நேரத்தில்‌ பணம்‌ செலுத்தாததால்‌ ஏற்பரும்‌ மின் துண்டிப்பு தவிர்க்கப்படகிறது.

2. செலுத்திய மின்கட்டண முன்பணத்திற்கு மின்நுகர்வோர்கள்‌ வட்டி பெறுவதோடு எதிர்வரும்‌ மின்கட்டண கேட்பு தொகையில்‌ சரி செய்யப்படும்‌.

3. நீண்ட நாட்களாக மின்‌ நுகர்வோர்‌ வீட்டில்‌ இல்லாதபட்சத்தில்‌ தாங்கள்‌ செலுத்திய மின்கட்டண முன் பணத்திலிருந்து எதிர்வரும்‌ மின்கட்டண கேட்பு தொகையை மின் கட்டண முன் பணத்திலிருந்து தானாக சரிசெய்யப்படும்‌.

எனவே, மின்கட்டண முன் பணம்‌ செலுத்தி மேற்காணும்‌ பயன்களை பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...