நீலகிரியில் இரண்டாம் சீசனுக்காக அக்., 5ம் தேதி முதல் சனி, ஞாயிறுகளில் சிறப்பு கூடுதல் மலை ரயில்

நீலகிரி : நீலகிரி இரண்டாம் சீசனை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை அக்டோபர் 5 முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி : நீலகிரி இரண்டாம் சீசனை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை அக்டோபர் 5 முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 



இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை அக்டோபர் 5 முதல் டிசம்பர் 28 ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சிறப்பு மலை ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்தது. 

அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ப்ரீமியம் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. காலை 09.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கல்லாறில் 09.28 மணி முதல் 09.35 மணி வரையிலும், ஹில்குரோவில் 10.46 மணி முதல் 11 மணி வரையிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த சிறப்பு மலை ரயிலில் நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் நூறு இருக்கைகளும் இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த சிறப்பு ரயில் சேவையின் பயணக் கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ. 1,100-ம், 2-ம் வகுப்பிற்கு ரூ. 800-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை முதல் வகுப்பிற்கு ரூ.1,450, இரண்டாம் வகுப்பிற்கு ரூ.1,050, பயணக்கட்டணமும், உதகை குன்னூர் இடையே முதல் வகுப்பிற்கு ரூபாய் 550 ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 200 மதிப்பிலான கிப்ட் பொருட்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த இரண்டாம், சீசனுக்காக சிறப்பு கூடுதல் மலை ரயில் இயக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...