வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன்‌ வளர்ப்பு பயிற்சி திட்டம்‌ : மாவட்ட ஆட்சியர்

கோவை : வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன்‌ வளர்ப்பு பயிற்சி திட்டம்‌ மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்

கோவை : வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன்‌ வளர்ப்பு பயிற்சி திட்டம்‌ மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-

தேசிய சிறுபான்மையினர்‌ வளர்ச்சி மற்றும்‌ நிதிக்கழகத்தின்‌ நிதி உதவியுடன்‌ கௌஷல் செகுஷால்தா திட்டத்தின்‌ கீழ்‌ டாம்கோ மூலம்‌ படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு திருவள்ளுவர்‌ மாவட்டத்தில்‌ செயல்படும்‌ ஆயத்த ஆடை பயிற்சி மற்றும்‌ வடிவமைப்பு மையம்‌ (ATDC) மூலம்‌ இலவச திறன்‌ வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும்‌ பயிற்சிக்கும்‌ பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ எம்பிராய்டரி பயிற்சிக்கு 50 பயனாளிக்கு 3. மாதம்‌ நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ மத வழி சிறுபான்மையினர்‌ வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்‌, கிறித்தவர்கள்‌, புத்த மதத்தினர்‌, சீக்கியர்கள்‌, பார்சியர்கள்‌ மற்றும்‌ ஜெயின்‌ பிரிவைச்‌ சார்ந்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. பயிற்சியாளரின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும்‌ 18 முதல்‌ 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்‌ வேண்டும்‌ இப்பயிற்சியின்‌ போது ஒரு பயனாளிக்கு ரூ.1000/- பயிற்சி உதவித்தொகை அளிக்கப்படும்‌ உண்டு உறைவிடக்‌ கட்டணம்‌ ஏதும்‌ வழங்கப்படாது.

இதற்கான நேர்காணல்‌ திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌, எண்‌.1டி, முதல்‌ குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகர்‌, திருவள்ளுவர்‌ மாவட்டம்‌ - 602001 உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும்‌ வடிவமைப்பு மையம்‌ அக்டோபர்‌ மாதம்‌ 03.10.2019 அன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. மேற்படி திட்டத்தின்‌ கீழ்‌ பயிற்சி பெற விரும்புவோர்‌ அசல்‌ சாதி சான்றிதழ்‌ வருமானச்சான்றிதழ், ஆதார்‌ அட்டை, கல்விச்சான்றிதழ்‌ ஆகிய சான்றிதழ்களுடன்‌ நேர்காணலில்‌ கோவை மாவட்டத்தில்‌ உள்ள இளைஞர்கள்‌ கலந்து கொள்ளலாம்‌. இப்பயிற்சி திட்டத்தில்‌ சிறுபான்மையின இளைஞர்கள்‌ சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌, இதுதொடர்பான விவரங்களுக்கு கோயம்புத்தூர்‌ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ / ஆய்த்த ஆடை பயிற்சி மற்றும்‌ வடிவமைப்பு மையம்‌ (ஏவரஸ்ட்‌, உதவி மண்டல மேலாளர்‌ - 9380513874) / தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌, சென்னை, தொலைபேசி - 044-28514846) ஆகியோர்களை அணுகலாம்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...