ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு : கோவை - நாகர்கோவில்‌ பயணிகள்‌ ரயில்‌ சேவையில் மாற்றம்

கோவை - நாகர்கோவில்‌ பயணிகள்‌ ரயில்‌ இரு மார்க்கத்திலும்‌ முழுமையாக இயங்காமல்‌, பயணிகளுக்கு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. சில நாட்கள்‌ திண்டுக்கல்லுடன்‌, மதுரையுடன்‌, கரூருடன்‌ ரயில்‌ திரும்பியது.

கோவை - நாகர்கோவில்‌ பயணிகள்‌ ரயில்‌ இரு மார்க்கத்திலும்‌ முழுமையாக இயங்காமல்‌, பயணிகளுக்கு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. சில நாட்கள்‌ திண்டுக்கல்லுடன்‌, மதுரையுடன்‌, கரூருடன்‌ ரயில்‌ திரும்பியது.

அதேபோல்‌, நாகர்கோவிலில்‌ இருந்து புறப்படும்‌ ரயில்‌ விருதுநகர்‌, மதுரையுடன்‌ திரும்புகிறது. முழுமையான பயணத்தை நிறைவு செய்யும்‌ நாட்கள்‌ மிகக் குறைவாகவே இருந்தது. இதன்‌ காரணமாக சீசன்‌ டிக்கெட்‌ எடுத்த பயணிகள்‌ கடந்த ஆறு மாதமாக ஏமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்‌.

இந்நிலையில்‌, இனி வியாழக்கிழமை மட்டுமே கோவை - நாகர்கோவில்‌ இரு மார்க்கத்திலும்‌ முழு அளவில்‌ இயங்கும்‌ என்றும்‌ மற்ற 6 நாட்களும்‌ ரயில்‌ கோவையில்‌ இருந்து திண்டுக்கல்‌ வரையும்‌, மறுமார்க்கமாக நாகர்கோவிலில்‌ இருந்து மதுரை வரை மட்டுமே இயங்கும் என மதுரை கோட்டம்‌ தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...