ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை : தமிழக மக்கள்‌ எதிர்வரும்‌ ஆயுதபூஜை பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடவும்‌, அதே சமயம்‌ பாதுகாப்பான, நெரிசலற்ற இனிய பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக பல்வேறு வழித்தடங்களில்‌ தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

கோவை : தமிழக மக்கள்‌ எதிர்வரும்‌ ஆயுதபூஜை பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடவும்‌, அதே சமயம்‌ பாதுகாப்பான, நெரிசலற்ற இனிய பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக பல்வேறு வழித்தடங்களில்‌ தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

கோவையிலிருந்து நாளை(04.10.2019) வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு - 33, திருச்சிக்கு-39, தேனிக்கு -26, சேலத்திற்கு- 67 என மொத்தம்‌165 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்- சென்னை வரை 1 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 6 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 22 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 17 பேருந்துகளும்‌, திருப்பூர்-தேனி வரை 6 பேருந்துகளும்‌, திருப்பூர்-சேலம்‌ வரை 25 பேருந்துகளும்‌ என 77 பேருந்துகளும்‌ ஆக மொத்த 242 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து (05.10.2019) சனிக்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு - 83, திருச்சிக்கு-79, தேனிக்கு -51, சேலத்திற்கு- 77 என மொத்தம்‌ 290 பேருந்துகளும்‌, இதேபோல்‌ ஈரோடு - சென்னை வரை 3 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 40 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 33 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ -தேனி வரை 12 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 35 பேருந்துகளும்‌ என 123 பேருந்துகளும்‌ ஆக மொத்த 413 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு - 18, திருச்சிக்கு-29, தேனிக்கு -16, சேலத்திற்கு- 32 என மொத்தம்‌ 95 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌ - மதுரை வரை 20 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 11 பேருந்துகளும்‌, திருப்பூர்-தேனி வரை 8 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 17 பேருந்துகளும்‌ என 56 பேருந்துகளும்‌ ஆக மொத்த 151 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து (08.10.2019) செவ்வாய்க்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு - 38, திருச்சிக்கு-44, தேனிக்கு -21, சேலத்திற்கு- 67 என மொத்தம்‌ 170 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌- சென்னை வரை 1 பேருந்தும்‌, ஈரோடு-சென்னை வரை 6 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 29 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 26 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 7 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 37 பேருந்துகளும்‌ என 106 பேருந்துகளும்‌ ஆக மொத்த 276 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து (09.10.2019) புதன்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு - 38, திருச்சிக்கு-44, தேனிக்கு -21, சேலத்திற்கு- 57 என மொத்தம்‌ 160 பேருந்துகளும்‌, இதேபோல்‌ ஈரோடு-சென்னை வரை 3 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 21 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 17 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 4 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 25 பேருந்துகளும்‌ என 70 பேருந்துகளும்‌ ஆக மொத்த 230 பேருந்துகளை இயக்கப்படுகிறது. மொத்தம்‌ ஆயுதபூஜையை முன்னிட்டு 1312 சிறப்புப் பேருந்துகள்‌ இயக்கப்படுகிறது.

பயணிகளின்‌ தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக பணியாளர் /அலுவலர்களுக்கு அறிவுறுத்தி சிறப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும்‌ பண்டிகை காலங்களை சிறப்புடன்‌ கொண்டாடிட கோவை மண்டலம்‌ சார்பில்‌ மேலாண்‌ இயக்குனர்‌ அன்பு ஆப்ரகாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...