கோவையில் இரண்டு இடங்களில் அமைச்சர் தலைமையில்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்

கோவை : கோவை (தெற்கு) வட்டம்‌, இராமநாதபுரம்‌, மாநகராட்சி ஆண்கள்‌ மேனிலைப்பள்ளியில்‌ அக்டோபர் 5 ஆம் தேதியும், சூலூர்‌ வட்டம்‌ பாப்பம்பட்டி பிரிவு டி.எஸ்‌.என்‌ மண்டபத்தில்‌ அக்டோபர் 6 ஆம் தேதி, ஆகிய இரண்டு நாட்கள்‌ முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்‌ மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது.

கோவை : கோவை (தெற்கு) வட்டம்‌, இராமநாதபுரம்‌, மாநகராட்சி ஆண்கள்‌ மேனிலைப்பள்ளியில்‌ அக்டோபர் 5 ஆம் தேதியும், சூலூர்‌ வட்டம்‌ பாப்பம்பட்டி பிரிவு à®Ÿà®¿.எஸ்‌.என்‌ மண்டபத்தில்‌ அக்டோபர் 6 ஆம் தேதி, ஆகிய இரண்டு நாட்கள்‌ முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்‌ மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, à®Šà®°à®• வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌, அமைச்சர்‌ அவர்கள்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்க மனுக்களை பெற்றுக்‌ கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்‌. எனவே, பொதுமக்கள்‌ இம்முகாமில்‌ கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த சிறப்பு குறைதீர்க்கும்‌ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 110 விதி-கீழ்‌ ஜூலை 18 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதனடிப்படையில்‌ ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று கோவை மாவட்டம்‌ வடக்கு வட்டத்திற்குட்பட்ட கணபதி பகுதியில்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்‌ அமைச்சர்‌.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இம்முகாமில்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் குறைதீர்க்கும்‌ முகாமில்‌, பொதுமக்களின்‌ அடிப்படைத்‌ தேவைகளான சாலைகள்‌, தெருவிளக்குகள்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌, பட்டா மாற்றம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ முதியோர்‌ ஒய்வதியம்‌, ஆதரவற்ற விதவைகள்‌ ஓய்வூதியம்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ ஓய்வதியம்‌, இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்‌ சான்றிதழ்‌, வருமானச்‌ சான்றிதழ்‌, வாரிசு சான்றிதழ்‌, உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கலாம்‌. 

எனவே, கோவை தெற்கு வட்டம்‌ மற்றும்‌ சூலூர்‌ வட்டம்‌ பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ இம்முகாமில்‌ கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...