வரும் அக்.,17 முதல் விமானப்படையில்‌ பயிற்றுநர்‌ பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம்‌ : மாவட்ட ஆட்சியர்‌

சென்னை, தாம்பரம்‌ இந்திய விமானப்படை தேர்வு நிலையம்‌ மூலம்‌ விமானப்படையில்‌ பயிற்றுநர்‌ பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம்‌ 17.10.2019 முதல்‌ 23.10.2019 வரை கோவை மாவட்டத்தில்‌ நடைபெறவுள்ளது.


சென்னை, தாம்பரம்‌ இந்திய விமானப்படை தேர்வு நிலையம்‌ மூலம்‌ விமானப்படையில்‌ பயிற்றுநர்‌ பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம்‌ 17.10.2019 முதல்‌ 23.10.2019 வரை கோவை மாவட்டத்தில்‌ நடைபெறவுள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில்‌ தமிழ்நாடு, கேரளா மற்றும்‌ யூனியன்‌ பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்‌ நிக்கோபர்‌ தீவுகள்‌ மற்றும்‌ லட்சத்‌ தீவுகள்‌ போன்ற பகுதிகளில்‌ உள்ள மனுதாரர்கள்‌ கலந்து கொள்ளலாம்‌. இந்த முகாம்‌, கோவை பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌, உடற்கல்வித்‌ துறை அரங்கில்‌ 17.10.2019 முதல்‌ 23.10.2019 வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில்‌ தமிழ்நாடு: மற்றும்‌ யூனியன்‌ பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்‌ நிக்கோபர்‌ தீவுகள்‌ மற்றும்‌ லட்சத்‌ தீவுகள்‌ ஆகிய பகுதிகளைச்‌ சேர்ந்த ஆண்கள்‌ மட்டுமே கலந்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌, கோவையில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ அல்லது www.airmenselection.cdac.in என்ற இணையதளம்‌ வாயிலாக விவரங்களை அறிந்து கொள்ளலாம்‌.

இந்த முகாமிற்கான வயது வரம்பு மற்றும்‌ கல்வித்தகுதிகள்‌:

19 ஜனவரி 1995 - 01 ஜூலை 2000

(1) BA ஆங்கிலம்‌ அல்லது B.Sc இயற்பியல்‌/ உளவியல்‌, வேதியியல்‌, கணிதம்‌, IT / கணிப்பொறியியல்‌, புள்ளியியல்‌ ஒரு பாடமாக இருத்தல்‌ அவசியம்‌ அல்லது BCA - 50% சதவீத மதிப்பெண்களுடன்‌ தேர்ச்சி

(2) B.Ed 50% சதவீத மதிப்பெண்களுடன்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற நிலையத்தில்‌ தேர்ச்சி

19 ஜூலை 1992 - 01 ஜூலை 2000

(1) MA ஆங்கிலம்‌/உளவியல்‌ பட்டம்‌ அல்லது MSc கணிதம்‌ / இயற்பியல்‌, புள்ளியியல்‌/கணிப்பொறியியல்‌ / IT அல்லது MCA - 50% சதவீத மதிப்பெண்களுடன்‌ தேர்ச்சி

(2) B.Ed 50% சதவீத மதிப்பெண்களுடன்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற நிலையத்தில்‌ தேர்ச்சி

இந்த ஆள்சேர்ப்பு முகாமில்‌ கலந்து கொண்டு தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற ஏதுவாக 09.10.2019 அன்று முதல்‌ கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ சிறப்புப் பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பிற்கு மனுதாரர்கள்‌ கட்டணம்‌ எதுவும்‌ செலுத்தத்‌ தேவை இல்லை.

மேற்கண்ட தகுதியுடைய ஆண்‌ விண்ணப்பதாரர்கள்‌ இதற்கான விருப்பக்‌ கடிதத்துடன்‌ தங்களுடைய விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்‌. மனுதாரர்கள்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு தேர்வில்‌ தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்‌ அடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...