இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌ பணிக்காலியிடங்களுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு

கோவை : தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வுக்குழுமம்‌ மூலம்‌ 8,888 இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌(ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ படை, சிறைக்‌ காவலர்கள்‌, தீயணைப்போர்‌) ஆகிய பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வுக்குழுமம்‌ மூலம்‌ 8,888 இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌(ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ படை, சிறைக்‌ காவலர்கள்‌, தீயணைப்போர்‌) ஆகிய பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்‌ கட்டமான எழுத்துத்‌ தேர்வு முடிந்து அதற்கான முடிவுகளும்‌ வெளியிடப்பட்டது. எழுத்துத்‌ தேர்வில்‌ வெற்றி பெற்றவர்கள்‌ இரண்டாம்‌ கட்டமான உடற்தகுதி தேர்வில்‌ வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மூலம்‌ 09.10.2019 முதல்‌ சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உடற்பயிற்சி வகுப்புகள்‌ தினமும்‌ உரிய பயிற்சியாளரைக்‌ கொண்டு நடத்தப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள்‌, அதற்கான ஆதாரம்‌ மற்றும்‌ புகைப்படத்துடன்‌ கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 09.10.19 தேதி அன்று காலை 10.00 மணிக்கு நேரில்‌ வந்து பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ளலாம்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு உடற்பயிற்சி தேர்வில்‌ தேர்ச்சி அடைந்து காவலர் பணிவாய்ப்பு பெற்று பயன்‌ அடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...