திருப்பூரில் விவசாயி நியாய விலைக்கடையை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூரில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் விவசாயி நியாய விலை கடையினை இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூரில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் விவசாயி நியாய விலை கடையினை இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், இத்திட்டமானது, விவசாய பெருமக்களுக்கும், விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்குகின்ற அனைத்து தரப்பட்ட பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டமாகும். மேலும், இந்த விவசாயி நியாய விலை கடையின் முக்கிய நோக்கம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி விலையிலேயே பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதாகும்.

மேலும், இந்த நியாய விலைக்கடையில் ஸ்மார்ட் கார்டுகள் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும். உழவர் பாதுகாப்புத்திட்ட அட்டை பதிவு செய்யப்பட்டு தேவைக்கேற்ப பொருட்கள் மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் ரேசன் கார்டு இல்லாதவர்களும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாயி நியாய விலைக்கடை தலைவர் ஜெயகணேஷ், இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை செயல் அலுவலர் கிஷோர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...