பிரதமரின்‌ கல்வி உதவித்தொகையினை பெற ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்‌

முன்னாள்‌ படைவீரர்களின்‌ வாரிசுகளில்‌ 2019-20-ம்‌ கல்வியாண்டில்‌ முதலாமாண்டு MBBS, BE, B.Tech, BDS, BVSC, B.Sc Nursing, B.Sc Agri, B.Ed., BBA. BCA, B.Pharma உள்ளிட்ட பல்வேறு தொழில் மற்றும்‌ தொழிற்சார்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவியருக்கு மைய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பிரதமரின்‌ கல்வி உதவித்தொகையினைப்‌ பெற ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள்‌ படைவீரர்களின்‌ வாரிசுகளில்‌ 2019-20-ம்‌ கல்வியாண்டில்‌ முதலாமாண்டு MBBS, BE, B.Tech, BDS, BVSC, B.Sc Nursing, B.Sc Agri, B.Ed., BBA. BCA, B.Pharma உள்ளிட்ட பல்வேறு தொழில் மற்றும்‌ தொழிற்சார்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவியருக்கு மைய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பிரதமரின்‌ கல்வி உதவித்தொகையினைப்‌ பெற ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12-ம்‌ வகுப்பில்‌ 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல்‌ பெற்று தேர்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ இரு குழந்தைகள்‌ மட்டுமே இத்திட்டத்தில்‌ பயனடைய முடியும்‌. இதற்கான விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ தகவல்‌ கையேடுகளை www.ksb.gov.in எனும்‌ இணையதள முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேலும்‌ ஆன்லைன்‌ மூலம்‌ மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. விண்ணப்பிக்க வரும் நவ., 15ம் தேதி கடைசி நாளாகும்‌.

எனவே, கோவை மாவட்டத்தைச்‌ சார்ந்த முன்னாள்‌ படைவீரர்களின்‌ குழந்தைகள்‌ இக்கல்வி நிதியுதவியினைப்பெற குறித்த காலத்தில்‌ விண்ணப்பித்து பயனடையுமாறும்‌ மேலும்‌ விவரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல உதவி இயக்குநரை அணுகலாம்‌ எனவும்‌, கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...