முன்பதிவு செய்ய ரெடியா? : தீபாவளிக்கு கோவையிலிருந்து 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்‌ கோவை கோட்டத்தில்‌ இருந்து 3 ஆயிரம்‌ சிறப்புப்‌ பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மேலாண்‌ இயக்குநர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்‌ கோவை கோட்டத்தில்‌ இருந்து 3 ஆயிரம்‌ சிறப்புப்‌ பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மேலாண்‌ இயக்குநர் தெரிவித்தார்.

பொது மக்கள்‌ 27.10.2019 அன்று வருகின்ற தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடவும்‌, அதே சமயம்‌ பாதுகாப்பான, நெரிசல்‌ அற்ற இனிய பயணத்தை மேற்கொள்ளவும்‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கோவைலிட்‌., தேவையான சிறப்பு பேருந்துகளை இயக்கிட தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழில்‌ நகரங்களான கோவை, திருப்பூரில்‌ இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்‌ உள்ளிட்ட‌ தென்‌ மாவட்டங்களுக்கு ஏராளமானோர்‌ தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்‌.

இதையொட்டி, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம்‌ சார்பில்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர்‌, ஈரோடு, உதகை மண்டலங்களில்‌ இருந்து வெளியூர்களுக்கு 3 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட சிறப்புப்‌ பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

24.10.2019 வியாழக்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 06, மதுரைக்கு-53, திருச்சிக்கு -41, தேனிக்கு- 21, சேலத்திற்கு - 37, உதகையிலிருந்து சென்னைக்கு - 02 என மொத்தம்‌160 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌-சென்னை வரை 01 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 05 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 35 பேருந்துகளும்‌, திருப்பூர்-திருச்சி வரை 35 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 17 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 60 பேருந்துகளும்‌ என 153 பேருந்துகளும்‌ ஆக மொத்தமாக 313 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

25.10.2019 வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 06, மதுரைக்கு-133, திருச்சிக்கு -76, தேனிக்கு- 51, சேலத்திற்கு - 57, உதகையிலிருந்து சென்னைக்கு - 02 என மொத்தம்‌ 325 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌-சென்னை வரை 03 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 12 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 120 பேருந்துகளும்‌, திருப்பூர்-திருச்சி வரை 115 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 40 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 100 பேருந்துகளும்‌ என 390 பேருந்துகளும்‌ ஆக மொத்தமாக 715 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

26.10.2019 சனிக்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 03, மதுரைக்கு-153, திருச்சிக்கு -88, தேனிக்கு- 61, சேலத்திற்கு - 62, என மொத்தம்‌ 367 பேருந்துகளும்‌, இதேபோல்‌, திருப்பூர்‌-சென்னை வரை 02 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 10 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ -மதுரை வரை 145 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 145 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 70 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 135 பேருந்துகளும்‌ என 507 பேருந்துகளும்‌ ஆக மொத்தமாக 874 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

27.10.2019 ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து மதுரைக்கு-28, திருச்சிக்கு -27, தேனிக்கு- 11 சேலத்திற்கு - 12, உதகையிலிருந்து சென்னைக்கு - 01 என மொத்தம்‌ 79 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌ -சென்னை வரை 02 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 05 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 27 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-திருச்சி வரை 18 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 07 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 25 பேருந்துகளும்‌ என 84 பேருந்துகளும்‌ ஆக மொத்த 163 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

26.10.2019 திங்கள்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 06, மதுரைக்கு-48, திருச்சிக்கு -41, தேனிக்கு- 16, சேலத்திற்கு - 27, உதகையிலிருந்து சென்னைக்கு - 02 என மொத்தம்‌ 140 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌-சென்னை வரை 02 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 10 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 60 பேருந்துகளும்‌, திருப்பூர்-திருச்சி வரை 61 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 08 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 57 பேருந்துகளும்‌ என 198 பேருந்துகளும்‌ ஆக மொத்தமாக 338 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

29.10.2019 செவ்வாய்க்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 06, மதுரைக்கு-48, திருச்சிக்கு -41 தேனிக்கு- 16, சேலத்திற்கு - 27, உதகையிலிருந்து சென்னைக்கு - 02 என மொத்தம்‌ 325 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌-சென்னை வரை 01 பேருந்தும்‌, ஈரோடு - சென்னை வரை 05 பேருந்துகளும்‌, திருப்பூர்‌ - மதுரை வரை 45 பேருந்துகளும்‌, திருப்பூர்-திருச்சி வரை 39 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 10 பேருந்துகளும்‌, திருப்பூர்-சேலம்‌ வரை 37 பேருந்துகளும்‌ என 137 பேருந்துகளும்‌ ஆக மொத்தமாக 277 பேருந்துகளை இயக்கப்படுகிறது.

30.10.2019 வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு - 03, மதுரைக்கு-28, திருச்சிக்கு -27, தேனிக்கு- 11, சேலத்திற்கு - 22, உதகையிலிருந்து சென்னைக்கு - 01 என மொத்தம்‌ 92 பேருந்துகளும்‌, இதேபோல்‌ திருப்பூர்‌ - மதுரை வரை 38 பேருந்துகளும்‌, திருப்பூர்‌- திருச்சி வரை 25 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-தேனி வரை 12 பேருந்துகளும்‌, திருப்பூர்‌-சேலம்‌ வரை 25 பேருந்துகளும்‌ என 100 பேருந்துகளும்‌ என மொத்தமாக 192 பேருந்துகளை இயக்கப்படுகிறது. மொத்தம்‌ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2872 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படுகிறது.

பயணிகளின்‌ தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை தயார்‌ நிலையில்‌ வைத்து இயக்கிட அரசு போக்குவரத்து கழக பணியாளர்‌/ அலுவலர்களுக்கு அறிவுறுத்தி சிறப்பு பணிகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும்‌ தீபாவளி பண்டிகை சிறப்புடன்‌ கொண்டாடிட வேண்டும்‌ என கோவை மண்டலம்‌ சார்பில்‌ மேலாண்‌ இயக்குனர்‌ அன்பு ஆபிரகாம்‌ தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...