வரும் நவ., 7ம் தேதி குற்றவியல்‌ நடைமுறை சட்டப்பிரிவின்‌ கீழ்‌ கைப்பற்றப்பட்ட 45 வாகனங்கள்‌ ஏலம்

கோவை: இந்திய குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ பிரிவு 102-ன்‌ கீழ்‌ கைப்பற்றப்பட்ட 45 வாகனங்கள்‌ வரும்‌ நவம்பர் 7ம் தேதி பொது ஏலத்தில்‌ விடப்படுவதாக கோவை வடக்கு வட்டாட்சியர் ஏல அலுவலர் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்திய குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ பிரிவு 102-ன்‌ கீழ்‌ கைப்பற்றப்பட்ட 45 வாகனங்கள்‌ வரும்‌ நவம்பர் 7ம் தேதி பொது ஏலத்தில்‌ விடப்படுவதாக கோவை வடக்கு வட்டாட்சியர் ஏல அலுவலர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்‌, கோவை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட C2 பந்தைய சாலை மற்றும்‌ C4 இரத்தினபுரி ஆகிய காவல்‌ நிலையங்களில்‌ இந்திய குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ பிரிவு 102-ன்‌ கீழ்‌ கைப்பற்றப்பட்ட 45 வாகனங்கள்‌ வரும்‌ நவம்பர் 07ம் தேதி காலை 10.00 மணியளவில்‌ கோவை வடக்கு வட்டாட்சியர்‌ முன்னிலையில்‌ அவிநாசி சாலையில் உள்ள PRS மைதானத்தில் பொது ஏலத்தில்‌ விடப்படுகிறது.

ஏலம்‌ கோர விரும்பும்‌ நபர்கள்‌ மேற்படி நாளில்‌ ஏலத்தில்‌ கலந்து கொண்டு ஏலம்‌ கோரலாம்‌ என்றும்‌, ஏலத்தில்‌ கலந்து கொள்பவர்கள்‌ வாகனங்களை 01.11.2019 அன்று முதல்‌ மேற்படி இடத்தில்‌ பார்வையிட்டு கொள்ளலாம்‌ என கோவை வடக்கு வட்டாட்சியர் ஏல அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...