கனமழை காரணமாக உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி : தொடர் மழையால், மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை - குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி : தொடர் மழையால், மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை - குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே பயணிக்கும் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலைரயிலில் சென்று இயற்கை அழகினை ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து மலை ரயிலில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையே இன்று(அக்.,30) மதியம் 3.00 மணிக்கு இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, மழை நீடிக்கும் பட்சத்தில் நாளையும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும், நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை - குன்னூர் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...