கோவை மேட்டுப்பாளையம் இடையே அதிநவீன மின்சார இரயில் எஞ்சின் நாளை துவங்குகிறது

கோவை : கோவை மேட்டுப்பாளையம் இடையே தற்போது இயங்கி வரும் பயணிகள் இரயில் எஞ்சினுக்கு மாற்றாக அதிநவீன மின்சார எஞ்சின் மூலம் இயங்கும் இரயில் நாளை துவங்க உள்ளது.


கோவை : கோவை மேட்டுப்பாளையம் இடையே தற்போது இயங்கி வரும் பயணிகள் இரயில் எஞ்சினுக்கு மாற்றாக அதிநவீன மின்சார எஞ்சின் மூலம் இயங்கும் இரயில் நாளை துவங்க உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் இடையே தினந்தோறும் இயங்கும் பயணிகள் இரயில் சேவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதனை மேம்படுத்தும் பணிகளில் தென்னக இரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள மின்சார எஞ்சினுக்கு பதிலாக அதிநவீன மெமு எனப்படும் பிரதான மின்வழித்தட பல்முனை அலகு எஞ்சினை சேலம் இரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை மற்றும் மும்பையில் இயங்கும் புறநகர் இரயில்களை போன்ற இந்த இரயில் சேவை இந்தியாவில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த தூரங்களுக்கு சுமார் 105 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் இந்த இரயில்கள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகள் நாளை (31.10.2019 அன்று) மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து தனது சேவையை துவங்க உள்ளது. தற்போதுள்ள இரயில்பெட்டிகளில் அமரும் வசதி மட்டுமே உள்ள நிலையில், இந்த மெமு இரயில் சேவையில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் வசதிகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கூடுதலான பயணிகள் இந்த இரயிலை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த இரயிலில் பயணிகளுக்கு 2 கழிவறைகளும், எஞ்சின் ஓட்டுனர்களுக்கு ஒரு கழிவறையும் இருக்கும். இந்த புதிய வகை எஞ்சின் அறிமுகப்படுத்தப்படுவதால் பயண நேரம் மேலும் சில நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் இரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...