ஆறு வார கால ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி

இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி கோவையில் இயங்கி வரும் எம், எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம் சார்பில் ஆறு வார கால ஆயுத்த ஆடை உற்பத்தி தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வருகின்ற 18.11.2019 முதல் 30.12.2019 வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது கோவை ராம்நகர், பட்டேல் சாலையில் உள்ள அம்மையத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி கோவையில் இயங்கி வரும் எம், எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம் சார்பில் ஆறு வார கால ஆயுத்த ஆடை உற்பத்தி தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வருகின்ற 18.11.2019 முதல் 30.12.2019 வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது கோவை ராம்நகர், பட்டேல் சாலையில் உள்ள அம்மையத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான சரியான திட்டத்துடன் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அம்மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் தொழில் முனைவோர் பயிற்சி முடித்து தொழில் தொடங்குபவர்களுக்கும், தகுதியுள்ள திட்டங்களுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம், கடன் உதவி பரிந்துரை செய்யப்படும். மேலும் இந்த பயிற்சில் கலந்துகொள்பவர்களுக்கு மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 18.11.2019 தேதிக்கு முன்பாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...