இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ பதவிக்கான உடற்கூறு மற்றும்‌ திறன்‌ தேர்வு; நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றம்

கோவை : கோவை மாவட்டத்தில்‌ தொடர்ந்து மழை பெய்து வரும்‌ காரணமாக உடற்கூறு மற்றும்‌ திறன்‌ தேர்வுகள்‌ கோவை காவலர்‌ பயிற்சிப்‌ பள்ளி வளாகத்திற்கு பதிலாக கோவை மாவட்ட நேரு விளையாட்டு அரங்கத்தில்‌ நடைபெற உள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில்‌ தொடர்ந்து மழை பெய்து வரும்‌ காரணமாக உடற்கூறு மற்றும்‌ திறன்‌ தேர்வுகள்‌ கோவை காவலர்‌ பயிற்சிப்‌ பள்ளி வளாகத்திற்கு பதிலாக கோவை மாவட்ட நேரு விளையாட்டு அரங்கத்தில்‌ நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலமாக நடைபெற இருக்கும்‌ இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, சிறைக்காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பு‌ படைவீரர்‌ - 2019 ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பித்த கோவை காவல்‌ சரகத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டத்தைச்‌ சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பொது உடல்கூறு / திறனிற்கான முதற்கட்ட தேர்விற்காக 06.11.2019 அன்று கோவை காவலர்‌ பயிற்சிப்‌ பள்ளி மைதானத்தில்‌ ஆஜராக தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலமாக அழைப்புக்‌ கடிதம்‌ ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில்‌ பெய்து வரும்‌ தொடர் கனமழை காரணத்தினால்‌ உடற்கூறு மற்றும்‌ திறன்‌ தேர்வுகள்‌ கோவை காவலர்‌ பயிற்சிப்‌ பள்ளி வளாகத்திற்கு பதிலாக கோவை மாவட்ட நேரு விளையாட்டு அரங்கத்தில்‌ நடைபெற உள்ளது.

எனவே கோவை, ஈரோடு, திருப்பூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய அழைப்புக்‌ கடிதம்‌ கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள்‌ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில்‌ குறிப்பிடப்பட்ட நேரத்தில்‌ நேரடியாக கோவை மாவட்ட நேரு விளையாட்டு அரங்கத்தில்‌ ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...