வெங்காயம் பற்றாக்குறை; நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெங்காயம்‌ வைத்திருந்தால் பறிமுதல்

கோவை: வெங்காய பற்றாக்குறை மற்றும்‌ விலையேற்றம்‌ காரணமாக வரும் வெங்காய மொத்த வியாபாரிகள்‌ 50 மெட்ரிக்‌ டன்களும்‌, சில்லரை வியாபாரிகள்‌ 10 மெட்ரிக்‌ டன்களும்‌ வெங்காயம்‌ இருப்பு வைத்துக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ அதற்கு மேல் இருந்தால் பறிமுதல்‌ செய்யப்படும்‌ என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை: வெங்காய பற்றாக்குறை மற்றும்‌ விலையேற்றம்‌ காரணமாக வரும் வெங்காய மொத்த வியாபாரிகள்‌ 50 மெட்ரிக்‌ டன்களும்‌, சில்லரை வியாபாரிகள்‌ 10 மெட்ரிக்‌ டன்களும்‌ வெங்காயம்‌ இருப்பு வைத்துக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ அதற்கு மேல் இருந்தால் பறிமுதல்‌ செய்யப்படும்‌ என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது நிலவி வரும்‌ வெங்காய பற்றாக்குறை மற்றும்‌ விலையேற்றம்‌ காரணமாக, வெங்காயம்‌ உணவு பொருள்‌ இருப்பு வைப்பதற்கான அளவு தற்போது இந்திய அரசாங்கம்‌ நிர்ணயித்து அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌ 1955 (10 of 1955) பிரிவு 3ல்‌ உரிய திருத்தம்‌ வெளியிட்டுள்ளது. அதனை தமிழகம்‌ முழுவதும்‌ கடை பிடித்திடவும்‌, அதில்‌ விதி மீறல்‌ இருப்பின்‌ அதனை கைப்பற்றவும்‌ தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 2019 நவம்பர்‌ 30 வரை 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...