தாட்கோ வாயிலாக மானியத்துடன்‌ கூடிய வங்கிக்கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்பு - மாவட்ட ஆட்சியர்

கோவை: தாட்கோ வாயிலாக மானியத்துடன்‌ கூடிய வங்கிக்கடன்‌ பெற இந்து - ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வகுப்பை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (எந்தவொரு தாட்கோ மானியமும்‌ ரொக்கமாக வழங்கப்படமாட்டாது)

கோவை: தாட்கோ வாயிலாக மானியத்துடன்‌ கூடிய வங்கிக்கடன்‌ பெற இந்து - ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வகுப்பை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (எந்தவொரு தாட்கோ மானியமும்‌ ரொக்கமாக வழங்கப்படமாட்டாது)

ஆதிதிராவிடர்‌ சமுதாயத்தைச்‌ சேர்ந்தவர்கள் application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும்‌,

பழங்குடியினர்‌ சமுதாயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ - fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டிய ஆவணங்கள்‌.

(1) நிரந்தர சாதி சான்று

(2) வருமான சான்று (வருட வருமானம்‌ ரூ.1,00,000/-ற்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌)

(3) குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று

(4) ஆதார்‌ அடையாள அட்டை.

(5) வாக்காளர்‌ அடையாள அட்டை

(6) பாஸ்போர்ட்‌ அளவு‌ புகைப்படம்‌

(7) திட்ட அறிக்கை (Project Report)

(8) தொடங்கவிருக்கும்‌ தொழிலுக்கான விலைப்புள்ளி (Quotation) கோவை மாவட்டத்திற்குள்‌ பெற்றதாக இருக்க வேண்டும்‌. விலைப்புள்ளி பெறப்படும்‌ நிறுவனத்திற்கு GST எண்‌ அவசியம்‌ வேண்டும்‌.

இணையதளத்தில்‌ விண்ணப்பித்தவர்களுக்கு தாட்கோ வாயிலாக நேர்காணல்‌ நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ அவர்கள்‌ விரும்பிய வங்கிக்கிளைக்கு கடன்‌ வழங்கும்‌ வகைக்கு அனுப்பி வைக்கப்படும்‌.

மேற்படி வங்கிக்கிளை கடன்‌ வழங்க விருப்பம்‌ தெரிவிக்கும்பட்சத்தில்‌ தாட்கோ மூலம்‌ மானியத்‌ தொகை முன்‌ விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) விடுவிக்கப்படும்‌.

ஆதிதிராவிடர்‌ சமுதாயத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு அவர்கள்‌ கோரும்‌ கடன்‌ தொகையில்‌ ஒரு இலட்சத்திற்கு 30% மானியம்‌ விடுவிக்கப்படும்‌. (அதிகபட்ச மானியம்‌ ரூ.2,25.000/-) பழங்குடியினர்‌ சமுதாயத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு ஒரு இலட்சத்திற்கு 50% மானியம்‌ விடுவிக்கப்படும்‌. (அதிகபட்ச மானியம்‌ ரூ.3,75,000/-)




தாட்கோ திட்டங்கள்‌

1. மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ விருப்புரிமை நிதித்திட்டம்‌ - இத்திட்டத்தில்‌ கீழ்க்கண்ட நபர்கள்‌ அதிகபட்சமாக ரூ.20,000/- வரை பயன்பெறலாம்‌. இதற்கு வயது வரம்பு/கல்வித்தகுதி/வருமான வரம்புகள்‌ கிடையாது.

 *ஆதரவற்ற விதவைகள்‌/கணவரால்‌ கைவிடப்பட்ட பெண்கள்.

 *உடல்‌ ஊனமுற்றோர்‌/எய்ட்ஸ்‌ நோயால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌.

 *வன்கொடுமையால்‌ பாதிக்கப்பட்டோர்‌, நலிவடைந்தோர்‌. 

2. தொழில்முனைவோர்‌ கடனுதவித்திட்டம்‌ (Entreprenuer Develpoment Programme- EDP)

 * வயது 18 - 65 - கல்வித்தகுதி தேவையில்லை.

 *திட்டத்‌ தொகை - ரூ.1,50,000/- ற்கு மேல்‌ ரூ.7,50,000/- க்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌ .

3. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத்திட்டம்‌ (Self Employment Programme for Youth - SEPY).

 *வயது 18 - 45 - கல்வித்தகுதி தேவையில்லை.

 *திட்டத்‌ தொகை - ரூ.1,50,000/- ற்கு மேல்‌ ரூ.7,50,000/- க்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌ .

4. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத்திட்டம்‌ - மருத்துவமனை அமைத்தல் (Self Employment Programme for Youth — SEPY-Clinic).

 *வயது 18 — 35

 *திட்டத்‌ தொகை - ரூ.1,50,000/- ற்கு மேல்‌ ரூ.7,50,000/- க்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌ .

 *கல்வித்தகுதி மருத்துவம்‌/ பல்‌ மருத்துவம்‌ / முடநீக்கியல்‌,/ இரத்த பரிசோதனை படிப்பு.

 *இந்திய மருத்துவ கவுன்சிலில்‌ பதிவு செய்திருக்க வேண்டும்‌.

5. மகளிர்‌,/ஆண்கள்‌,கலப்பு/திருநங்கைகள்‌ - சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும்‌ பொருளாதார கடனுதவி திட்டம் (RF & Economic - Assistance for SHG).

 *குறைந்தபட்சம்‌ 12 உறுப்பினர்கள்‌ இருக்க வேண்டும்‌.

 *வயது 18 - 65 - கல்வித்தகுதி தேவையில்லை.

 *குழு முதல்‌ முறை தரம் பிரிக்கப்பட்டபின்‌ சுழல் நிதியாக ரூ.25,000/- மானியத்துடன்‌ ரூ.75,000/- வரை கடன்‌ பெறலாம்‌. இரண்டு முறை தரம் பிரிக்கப்பட்ட பின்பு ரூ.2,50,000/- மானியத்துடன்‌ ரூ.5,00,000/- வரை கடன்‌ பெறலாம்‌.

 *ஊக்குநரது ஆண்டு வருமானம்‌ ரூ. 2,00,000/- ற்குள்‌ இருக்க வேண்டும்‌.

6. பட்டயக்கணக்கர்‌/வழக்குரைஞர்‌ தொழில்‌ துவங்க ரூ.50,000/- இலவசமாக வழங்கப்படும்‌.

7. இந்திய குடிமைப்பணி/தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணைய தொகுதி -1 முதனிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்றால்‌ முதன்மை தேர்விற்கு தயாராகும்‌ வகைக்கு ரூ.50,000/- இலவசமாக வழங்கப்படும்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...