வரைவு வாக்காளர்‌ பட்டியல் நவம்பர் 24 ஆம் தேதி வெளியிடப்படும்; கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிப்பு

கோவை: கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தம்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலர்‌ முனைவர்‌ மு..கருணாகரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌, இன்று நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தம்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலர்‌ முனைவர்‌ மு..கருணாகரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌, இன்று நடைபெற்றது. 



இக்கூட்டத்தில்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தம்‌ கண்காணிப்பு அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வரைவு வாக்காளர்‌ பட்டியல்‌ 25.11.2019 அன்று வெளியிடப்படவுள்ளது. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, à®®à®±à¯à®±à¯à®®à¯‌ பதிவுகளை திருத்தம்‌ செய்தல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை 25.11.2019 முதல்‌ 24.12.2019 வரை வழங்கலாம்‌.

வாக்குசாவடி மையங்களில்‌ உள்ள அலுவலர்கள்‌, வாக்குசாவடி நிலை அலுவலர்கள்‌, தாலுகா அலுவலர்கள்‌, வாக்காளர்‌ பதிவு அலுவலகங்கள்‌, ஆகியோரிடம்‌ விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்‌, இணை வழி மூலமாகவும்‌ விண்ணப்பங்களை அனுப்பலாம்‌. போதுமான விண்ணப்பங்கள்‌ வாக்குசாவடி நிலைய அலுவலகர்களிடம்‌ வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பம்‌ வழங்குவதற்கு www.nvsp.in மற்றும்‌ (Voters Helpline App) என்னும்‌ செயலி மூலமாகவும்‌ வழங்கலாம்‌.

வாக்காளர்‌ குறித்த சந்தேகங்களை, அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 6 மணி வரை 1950 என்னும்‌ வாக்காளர்‌ சேவை à®•ட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்‌.

சிறப்பு சுருக்க முறை திருத்த பணியின்‌ போது ஒரே பெயர்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பலமுறை பதிவு இருப்பின்‌, அவ்வாக்காளர்களின்‌ பதிவுகள்‌ நீக்கம்‌ à®šà¯†à®¯à¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯‌. மேலும்‌, 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடையும்‌, இளம்‌ புதிய வாக்காளர்களின்‌ பெயர்கள்‌ பதிவு செய்துக்‌ கொள்ளலாம்‌.

வாக்குச்சாவடி நிலையங்களில்‌ முகவர்களை அனைத்து கட்சிகளும்‌ நியமணம்‌ செய்யவேண்டும்‌. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ முறை திருத்தப்பணிகளின்‌ போது சிறப்பு முகாம்‌ நடைபெறும்‌ நாட்கள்‌ தெரிவிக்கப்படும்‌. இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌ ஜனவரி 2020 மூன்றாம்‌ வாரம்‌

வெளியிடப்படும்‌.

எனவே, வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, மற்றும்‌ பதிவுகளை திருத்தம்‌ செய்வதற்கு விண்ணப்பங்களை வழங்கி திருத்தம்‌ செய்து கொள்ளலாம்‌. 

இவ்வாய்ப்பை பொதுமக்கள்‌ அனைவரும்‌ பயன்படுத்தி கொள்ளவேண்டும்‌, என வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தம்‌ கண்காணிப்பு அலுவலர்‌, முனைவர்‌.மு.கருணாகரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.



இக்கூட்டத்தில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இராமதுரைமுருகன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.பிரசன்னாஇராமசாமி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(தேர்தல்‌) திரு.முத்துராமலிங்கம்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ திரு.சுரேஸ்குமார்‌, திரு.ரவிகுமார்‌, திரு.மகேஷ்‌, மற்றும்‌ வட்டாட்சியர்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ கலந்து கொண்டனர்‌. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...