மின்‌இணைப்புகளில்‌ ஏற்படும்‌ மின்தடையை சரி செய்ய புகார் எண் அறிவிப்பு

கோவை: மின்தடையை விரைவாக சரி செய்யவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்கள், கம்பிகள் குறித்து, தகவல் தெரிவிக்க தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ புகார் எண்களை அறிவித்துள்ளது.

கோவை: மின்தடையை விரைவாக சரி செய்யவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்கள், கம்பிகள் குறித்து, தகவல் தெரிவிக்க தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ புகார் எண்களை அறிவித்துள்ளது.

கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்‌ இயற்கை சீற்றத்தால்‌ ஏற்படும்‌ மின்தடை, தனிப்பட்ட மின்‌இணைப்புகளில்‌ ஏற்படும்‌ மின்தடை மற்றும்‌ மின்மாற்றிகள்‌ போன்ற பிற காரணங்களால்‌ ஏற்படும்‌ மின்தடைகளை சரிசெய்ய மின் நுகர்வோர்கள்‌ கீழ்கண்டவழிகளில்‌ தெரிவித்து பயன்பெறலாம்‌ என்று தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ தெரிவித்துள்ளது.

1) கணினி மையமாக்கப்பட்ட மின்தடை நீக்கம்‌ மையத்தை 1912 என்ற எண்ணில்‌ (24X 7) தொடர்புகொள்ளலாம்‌.

2) Whatsapp மூலமாக 9442111912 என்ற எண்ணில்‌ தெரிவிக்கலாம்‌.

3) அந்தந்த பகுதிகளின்‌ பிரிவு அலுவலகங்களின்‌ களப்பணியாளர்கள்‌ மற்றும்‌ உதவிமின்‌ பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம்‌.

4) மேற்கண்ட அலுவலருக்கு தொடர்பு கிடைக்காத பட்சத்தில்‌ அல்லது காலதாமதம்‌ ஏற்படின்‌ அடுத்த மேல்‌ நிலை அலுவலரான உதவி செயற்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம்‌.

கோவை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள்‌ மின்தடையின்போது தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள்‌ மற்றும்‌ அலுவலர்களின்‌ விபரங்கள்‌ இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும்‌ பிரிவு அலுவலகங்களின்‌ களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலைபேசி எண்கள்‌ பொதுமக்களுக்கு தெரியும்‌ வகையில்‌ அந்தந்த பகுதிகளின்‌ பிரிவு அலுவலக தகவல்‌ பலகையில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...