தொடர் மழை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து நவ., 24ம் தேதி வரை ரத்து

கோவை: தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் வரும் நவ., 24ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் வரும் நவ., 24ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே பயணிக்கும் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலைரயிலில் சென்று இயற்கை அழகினை ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து மலை ரயிலில் பயணித்து வருகின்றனர்.

பின் பகுதியில் இருந்து இயக்கப்படும் நீராவி எஞ்சின் காடு, மலை,வன விலங்குள்,அருவிகள் என இயற்கையின் கொடையை கான வரும் சுற்றுலா வாசிகளின் இந்த மலை ரயில் பருவமழை காரணமாக ஏற்படும் மண்சரிவு காரணமாக தொடர்ந்து இயக்க முடியாமல் அடிக்கடி ரத்து செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகள் அடர் வனத்தில் இருப்பதால் அவ்வப்போது மலைகளில் இருந்து மண் மற்றும் பாறைகள் உருண்டு தண்டவாளங்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் கடந்த இரு மாதத்தில் ஏழுக்கும் மேற்பட்ட முறை நடுவழியில் நிறுத்தப்பட்டு பின்னர் மலை ரயிலானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவால் ரயில் ரத்து செய்யப்பட்டுச் சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் பணிகள் நிறைவடைந்து இன்று மீண்டும் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர் மழை காரணமாக மீண்டும் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே மலை ரயில் போக்கு ரத்து தற்போது மேலும் ஒரு வாரகாலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இம்மாதம் 24 தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. தொடர் மண்சரிவு காரணமாக மலை ரயிலில் பயணிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...