ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித் துறையில்‌ ஊராட்சி செயலர்‌ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையில்‌ கிராம ஊராட்சிகளில்‌ காலியாக உள்ள ஊராட்சி செயலர்‌ பணியிடங்களை நிரப்பிடும்‌ பொருட்டு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையில்‌ கிராம ஊராட்சிகளில்‌ காலியாக உள்ள ஊராட்சி செயலர்‌ பணியிடங்களை நிரப்பிடும்‌ பொருட்டு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இக்காலிப்பணியிடங்களுக்கான விபரம்‌, இன சுழற்சி ஒதுக்கீட்டு முறை, விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும்‌ பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்‌ ஆகியவை இம்மாவட்டத்தின்‌ http://www.coimbatore.tn.nic.in/ à®Žà®©à¯à®± இணையதள முகவரியில்‌ பதிவிடப்பட்டு இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 19.11.2019 முதல்‌ மேற்படி இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 19.11.2019 முதல்‌ 29.11.2019 வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ பெற்றுக்‌ கொள்ளப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...