உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருப்பூர்: சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க திறமையுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


திருப்பூர்: சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க திறமையுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் காஸன் நகரில் 45வது உலக திறன் அறியும் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தன. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து 63 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மொத்தம் 48 மாணவர்கள் உலக திறனறியும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள உலக திறனறியும் (World Skills) போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க ஜனவரி 1, 1999ம் ஆண்டுக்கு மேல் பிறந்தவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இதற்காக இந்தியா சார்பில் இந்தியா ஸ்கில்ஸ் (India Skills) என்ற அமைப்பை உருவாகியுள்ளது.

முதலில் திறமையுள்ள வீரர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும். பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் திறனறியும் போட்டி நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உலக திறனறியும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தப் படுவார்கள்.

இந்த நிலையில், உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க திறமையுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...