பழங்குடி இன மாணவர்களின்‌ அறிவு திறன்‌ மேம்படுத்த பயிற்சி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

கோவை: பழங்குடி இன மாணவ, மாணவியர்களின்‌ அறிவு திறன்‌ மேம்படுத்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாகவும் வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: பழங்குடி இன மாணவ, மாணவியர்களின்‌ அறிவு திறன்‌ மேம்படுத்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாகவும் வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை மாவட்டம்‌, வடக்கு வட்டம்‌, ஆனைகட்டி அரசு பழங்குடியினர்‌ நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியினை “அறிவு திறன்‌ வளர்ச்சி சிறப்பு மையமாக” அடையாளம்‌ காணப்பட்டு 9ம்‌ வகுப்பு பயிலும்‌ பழங்குடி இன மாணவ, மாணவியர்களின்‌ அறிவு திறன்‌ மேம்படுத்தவும்‌ முன்மாதிரி மாணாக்கர்களாக கொண்டு வரும்‌ வகையில்‌ தயார்‌ செய்வதற்கு இப்பயிற்சி மையம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மையத்தில்‌ 2019-2020 கல்வி ஆண்டில்‌ கீழ்க்கண்ட விபர பட்டியலின்படி மாதத்தில்‌ சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில்‌ மட்டும்‌ “சிறப்பு பயிற்சி அளித்திட அதற்கான ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்ய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

கிழமை - சனி, ஞாயிறு




நேரம் - காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 1.00 மணி வரை, மதியம்‌ 2.00 மணி முதல்‌ மாலை 5.30 மணி வரை

வகுப்புகள் - தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌, சமூக அறிவியல்

இச்செய்தியின்படி நியமனம்‌ செய்யப்படும்‌ ஆசிரியர்கள்‌ நீட்‌, குருப்‌-1 குருப்‌-2 மற்றும்‌ குருப்‌- 4 உண்டான போட்டி தேர்வுகளுக்கு மாணாக்கர்களை தயார்‌படுத்தும்‌ வகையில்‌ பயிற்சி அளிக்க திறன்‌ பெற்றவர்களாக இருக்க வேண்டும்‌.

இப்பயிற்சி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ உள்ள மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின நல அலுவலகத்தில்‌ வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...