ஆதரவற்ற முதியோர்‌ இல்லங்கள்,‌ ஆதரவற்ற குழந்தைகளுக்கான வளாகங்கள்‌ துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டம்‌, சமூக நலத்துறையின்‌ கீழ் மாநில மற்றும்‌ மத்திய அரசு மானியம்‌ மூலம்‌ ஆதரவற்ற முதியோர்‌ இல்லங்கள்‌, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள்‌ துவங்க தகுதியுள்ள தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, சமூக நலத்துறையின்‌ கீழ் மாநில மற்றும்‌ மத்திய அரசு மானியம்‌ மூலம்‌ ஆதரவற்ற முதியோர்‌ இல்லங்கள்‌, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள்‌ துவங்க தகுதியுள்ள தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

சமூக நலத்துறையின்‌ கீழ்‌ மாநில அரசு நிதி உதவியுடன்‌ முதியோர்‌ இல்லங்கள்‌, முதியோர்கள்‌ மற்றும்‌ ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள்‌ மத்திய அரசு நிதியுடன்‌ மூத்த குடிமக்களுக்கான திட்டம்‌ மற்றும்‌ ஸ்வதார்‌ இல்லங்கள்‌ தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ மூலம்‌ செயல்பட்டு வருகின்றது. தற்போது ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள்‌ துவங்க புதிய கருத்துருக்கள்‌ தனியார்‌ தொண்டு நிறுவனங்களிலிருந்து வரவேற்கப்படுகின்றது.

மாநில அரசு நிதி உதவியுடன்‌ செயல்படும்‌ ஆதரவற்ற முதியோர்களுக்கான முதியோர்‌ இல்லங்களுக்கு, நிதி ஒதுக்கீடு 5 பங்கு மாநில அரசும்‌, ஒரு பங்கு தனியார்‌ தொண்டு நிறுவனம்‌ என்ற வகையிலும்‌, ஒரு இல்லத்தில்‌ பயன்பெற வேண்டியவர்களின்‌ எண்ணிக்கை 40 முதியோர்கள்‌ வரையிலும்‌ இருக்கவேண்டும்‌. மாநில அரசு நிதி உதவியுடன்‌ செயல்படும்‌ ஆதரவற்ற முதியோர்கள்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த வளாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு 75 சதவிகிதம்‌ மாநில அரசு, 25 சதவிகிதம்‌ தனியார்‌ தொண்டு நிறுவனம்‌ என்ற வகையிலும்‌, ஒரு இல்லத்தில்‌ பயன்பெற வேண்டியவர்களின்‌ எண்ணிக்கை 25 முதியோர்கள்‌ மற்றும்‌ 25 குழந்தைகள்‌ வரையிலும்‌ இருக்க வேண்டும்‌. மத்திய அரசு நிதி உதவியுடன்‌ மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ முதியோர்‌ இல்லங்களுக்கு நிதி ஒதுக்கீடு 60 சதவிகிதம்‌ மத்திய அரசும்‌, 40 சதவிகிதம்‌ மாநில அரசும்‌ என்ற வகையிலும்‌, ஒரு இல்லத்தில்‌ பயன்பெற வேண்டியவர்களின்‌ எண்ணிக்கை குறைந்தபட்சம்‌ 25 முதியோர்கள்‌ இருக்க வேண்டும்‌. அறக்கட்டளை சட்டம்‌ / கம்பெனி சட்டம்‌ சங்கச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ பதிவுச்சான்று (à®®) இன்று வரை புதுப்பிக்கப்பட்ட சான்றிதழும்‌, மாவட்ட சமூகநல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பெற்றோர்‌ மற்றும்‌ மூத்த குடிமக்கள்‌ பராமரிப்பு மற்றும்‌ நலச்சட்டம்‌ 2007 படி பதிவுச்‌ சான்று மற்றும்‌ புதுப்பித்தல்‌ சான்றிதழும்‌, பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டிட உறுதிச்சான்றும்‌, சுகாதாரத்‌ துறையிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச்‌ சான்றும்‌, திபணைப்பு துறையிடமிருந்து பெறப்பட்ட சான்றும்‌, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கட்டிட உரிமைச்சான்றும்‌ முதியோர்‌ இல்லம்‌ செயல்படுதற்காக வேறு எந்த ஒரு நிதியும்‌ (வெளிநாட்டு நிதி உட்பட)பெறவில்லை என்ற சான்றும்‌, முதியோர்‌ மற்றும்‌ ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்திற்கு மட்டும்‌ மேற்கண்ட சான்றிதழ்களுடன்‌ இளைஞர்‌ நீதிச்சட்டம்‌ 2000 திருத்தப்பட்டவை 2006(Juvenile Justice Act 2006)ன்‌ கீழ்‌ பெறப்பட்ட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள்‌ ஆகியவை தேவையான சான்றிதழ்களாகும்‌.

மேலும்‌, மத்திய மற்றும்‌ மாநில அரசு நிதி உதவியுடன்‌ ஸ்வதார்‌ இல்லத்திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ ஸ்வதார்‌ இல்லங்களுக்கு நிதி ஒதுக்கீடு 60 சதவிகிதம்‌ மத்திய அரசும்‌ 40 சதவிகிதம்‌ மாநில அரசும்‌ என்ற வகையிலும்‌, ஒரு இல்லத்தில்‌ பயன்பெற வேண்டியவர்களின்‌ எண்ணிக்கை 30 பெண்கள்‌ வரை இருக்கவேண்டும்‌. அறக்கட்டளை சட்டம்‌ / கம்பெனி சட்டம்‌ சங்கச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ பதிவுச்சான்று (à®®) இன்று வரை புதுப்பிக்கப்பட்ட சான்றிதழும்‌, மாவட்ட சமூகநல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பெற்றோர்‌ மற்றும்‌ மூத்த குடிமக்கள்‌ பராமரிப்பு மற்றும்‌ நலச்சட்டம்‌ 2007 படி பதிவுச்‌ சான்று மற்றும்‌ புதுப்பித்தல்‌ சான்றிதழும்‌, பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டிட உறுதிச்சான்றும்‌, சுகாதாரத்‌ துறையிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச்‌ சான்றும்‌, தீயணைப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட சான்றும்‌, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட 0-ப௦5௨ சான்று ஆகியவை தேவையான சான்றுகளாகும்‌.

எனவே மாநில மற்றும்‌ மத்திய அரசு மானியம்‌ மூலம்‌ புதிய முதியோர்‌ இல்லங்கள்‌, ஆதரவற்ற முதியோர்கள்‌ இல்லங்கள்‌ மற்றும்‌ ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள்‌ துவங்க மேற்காணும்‌ சான்றுகளுடன்‌ 30.11.2019 பிற்பகல்‌ 5.00மணி வரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌, விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தின்‌, 0422-2305126 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...