கோவை - கொல்கத்தா இடையே சுவிதா சிறப்பு ரயில்

கோவை: கோவையில்‌ இருந்து ஜனவரி 3ம்‌ தேதி முதல்‌ பிப்ரவரி 28ம்‌ தேதி வரை வாரத்தில்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ இரவு 9:45க்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:45க்கு சான்றகாச்சி சென்றடையும்‌.

கோவை: கோவையில்‌ இருந்து ஜனவரி 3ம்‌ தேதி முதல்‌ பிப்ரவரி 28ம்‌ தேதி வரை வாரத்தில்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ இரவு 9:45க்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:45க்கு சான்றகாச்சி சென்றடையும்‌.

இந்த ரயில்‌ தமிழகத்தில்‌ திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும்‌ பெரம்பூர்‌ ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ நின்று செல்லும்‌. இந்த ரயில்‌ சென்னை சென்டரல்‌ செல்லாது.

வண்டி எண் 80823 சான்றகாச்சி -கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் 21.50 மணிக்கு சான்றகாச்சியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 14.25 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். எதிர் திசையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 21.45 மணிக்கு கோவையில்‌ இருந்து புறப்படும் 80824 கோயம்புத்தூர்-சான்றகாச்சி வாராந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 08.45 மணிக்கு சான்றகாச்சி வரும்.

இரண்டு ஏசி -2 அடுக்கு, நான்கு ஏசி -3 அடுக்கு, பன்னிரண்டு ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட சுவிதா சிறப்பு ரயில் கரக்பூர், பாலசூர், பத்ராக், நராஜ் மார்த்தாபூர், புவனேஸ்வர், குர்தா ரோடு, பிரம்மபூர், சோம்பேட்டா, பலாசா, ஸ்ரீகாகுளம் சாலை, விஜயநகரம், கோட்டவலாசா, துவாடா, துனி, சமல்கோட், ராஜமுந்திரி, எலுரு, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூர், குடூர், சல்லூருபேட்டா, பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...