உள்ளாட்சி தேர்தல்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட முன்னாள்‌ படைவீரர்கள்‌ விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை: தமிழக ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ பாதுகாப்புப்‌ பணியில்‌ முன்னாள்‌ படைவீரர்களை ஈடுபடுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: தமிழக ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ பாதுகாப்புப்‌ பணியில்‌ முன்னாள்‌ படைவீரர்களை ஈடுபடுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி, 16ம் தேதியுடன் முடிந்தது.

இந்த நிலையில், தமிழக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ பாதுகாப்புப்‌ பணியில்‌ முன்னாள்‌ படைவீரர்களை ஈடுபடுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இந்த பணிக்கு தகுதியும்‌, திறனும் உள்ள கோயம்புத்தூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ தங்களது முன்னாள்‌ படைவீரர்‌ அடையாள அட்டை மற்றும்‌ படைப்பணி விபரச்சான்றுடன்‌ கோவை மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தினை நேரில்‌ அணுகி விருப்ப விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கலாம்‌ எனவும்‌, இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படியான ஊதியம்‌ மற்றும்‌ உணவுப்படி வழங்கப்படும்‌ எனவும்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...