கோயம்புத்தூர்‌ - அசன்சொல்‌ இடையே ஜனவரி மாதத்தில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோயம்புத்தூர்‌ - அசன்சொல்‌ இடையே ஜனவரி மாதத்தில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோயம்புத்தூர்‌ - அசன்சொல்‌ இடையே ஜனவரி மாதத்தில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையில்‌ இருந்து ஜனவரி 4, 11, 18, மற்றும்‌ 25ம்‌ தேதிகளில்‌ இரவு 9:45க்கு புறப்படும்‌ சிறப்பு ரயில்‌, திங்கட்கிழமைகளில்‌ காலை 10:30க்கு அசன்சொல்‌ சென்றடையும்‌. இந்த சிறப்பு ரயில்‌ தமிழகத்தில்‌ திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம்‌, சென்னை பெரம்பூர்‌ ரயில்‌ நிலையங்களில்‌ நின்று செல்லும்‌. (சென்னை சென்ட்ரல்‌ செல்லாது)

இந்த வாராந்திர சிறப்பு ரயிலின் ஏசி 2 அடுக்கு, ஏசி மூன்று அடுக்கு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு டிசம்பர் 26ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...