ரயில் கட்டணம் அதிரடியாக உயர்வு..! நள்ளிரவு முதல் அமல்..!

ரயில் கட்டணங்கள் இன்று (31.12.2019) நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாகவும் இந்த திருத்தப்பட்ட புதிய கட்டணம் இன்று நள்ளிரவு முதல் வசூலிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில் கட்டணங்கள் இன்று (31.12.2019) நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாகவும் இந்த திருத்தப்பட்ட புதிய கட்டணம் இன்று நள்ளிரவு முதல் வசூலிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில்வே வருவாய் குறைவதால், பயணிகள் டிக்கெட் கட்டணம், சரக்கு ரயில் கட்டணத்தை முறைப்படுத்த உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கிலோ மீட்டருக்கு 1 பைசா முதல் 4 பைசா வீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி அல்லாத சாதாரண வகுப்பு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல், குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர்சாதன வசதி வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 பைசா வீதமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் கட்டணம், சீசன் டிக்கெட்களின் விலையும் உயர்த்தப்படவில்லை.

இந்த கட்டண உயர்வு சதாப்தி மற்றும் ராஜதானி ஆகிய ரயில்களுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த ரயில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு(செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் கூறியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...