வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, முகவரி மாற்றம்‌ செய்ய சிறப்பு முகாம் - கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டத்தில்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, முகவரி மாற்றம்‌ செய்யும்‌ பணிகளுக்காக சிறப்பு முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, முகவரி மாற்றம்‌ செய்யும்‌ பணிகளுக்காக சிறப்பு முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ வழிகாட்டுதல்களின்படி, வாக்காளர்‌ பட்டியல்‌ திருத்தும்‌ பணி 23.12.2019 முதல்‌ நடைபெற்று வருகிறது. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, முகவரி மாற்றம்‌ செய்யும்‌ பணிகளுக்காக சிறப்பு முகாம்‌ முதல்‌ கட்டமாக 04.01.2020 (சனிக்கிழமை) மற்றும்‌ 05.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும்‌ இரண்டாம்‌ கட்டமாக 11.01.2020 (சனிக்கிழமை) மற்றும்‌ 12.01.2020 (ஞாயிற்றுக்கிழமை)-களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும்‌ நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில்‌ உள்ள 974 வாக்குச்சாவடி மையங்களில்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

01.01.2020 அன்று பதினெட்டு வயது நிறைவடைந்தவர்‌ (31.12.2001 அன்றோ அல்லது முன்னதாகவோ பிறந்தவர்‌) தமது பெயரினை வாக்காளர்‌ பட்டியலில்‌ சேர்க்க விண்ணப்பம்‌ செய்யலாம்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பதற்கு, படிவம்‌ 6-இன்‌ மூலமாகவும்‌, பதிவினை நீக்கம்‌ செய்ய படிவம்‌ 7-இன்‌ மூலமாகவும்‌, ஏற்கெனவே உள்ள பதிவில்‌ திருத்தம்‌ செய்ய படிவம்‌ 8-இன்‌ மூலமாகவும்‌, ஒரே சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பகுதியில்‌ குடி பெயர்ந்தவர்கள்‌ படிவம்‌ 8ஏ-இன்‌ மூலமாகவும்‌ விண்ணப்பம்‌ செய்யலாம்‌. ஒரு சட்டமன்ற தொகுதிக்குண்டான பகுதியிலிருந்து வேறொரு சட்டமன்ற தொகுதிக்குண்டான பகுதிக்கு குடி பெயர்ந்து சென்றவர்கள்‌ புதிய பகுதியில்‌ பெயர்‌ சேர்க்கவும்‌ படிவம்‌ 6-ஐ பயன்படுத்த வேண்டும்‌.

மேலும்‌, www.nvsp.in எனும்‌ இணைய முகவரியின்‌ வாயிலாகவோ அல்லது Voters’ Helpline App எனும்‌ ஆண்ட்ராய்ட்‌ செயலி மூலமாகவோ பொதுமக்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்யலாம்‌. www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ மனுவை பதிவு செய்யலாம்‌. மாவட்ட நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ பொது சேவை மையங்களிலும்‌, இணைய வழியில்‌, பதிவு செய்யலாம்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்ய 22.01.2020 வரை மனுக்கள்‌ பெறப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலும்‌, சிறப்பு முகாம்‌ நாட்களில்‌, வாக்குச்‌ சாவடிகளில்‌, சம்மந்தப்பட்ட பகுதிக்குண்டான வாக்காளர்‌ பட்டியல்‌ பொது மக்கள்‌ பார்வைக்கு வைக்கப்படும்‌. தங்களது பதிவினை சம்மந்தப்பட்ட வாக்காளர்‌ பட்டியலினை பார்வையிட்டு பொது மக்கள்‌ தெரிந்து கொள்ளலாம்‌. என மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...