கோவை உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல்‌ அலுவலர்கள்‌, வாக்காளர்களுக்கு நன்றி - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ அமைதியான முறையில்‌ சுமூகமாக நடைபெற சிறப்பான முறையில்‌ பணியாற்றிய அனைத்து தேர்தல்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌, பொதுமக்கள்‌, வாக்காளர்கள்‌ என அனைவருக்கும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக மாவட்ட ஆட்சியர்‌ கு. இராசாமணி அவர்கள்‌ நன்றி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ அமைதியான முறையில்‌ சுமூகமாக நடைபெற சிறப்பான முறையில்‌ பணியாற்றிய அனைத்து தேர்தல்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌, பொதுமக்கள்‌, வாக்காளர்கள்‌ என அனைவருக்கும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக மாவட்ட ஆட்சியர்‌ கு. இராசாமணி அவர்கள்‌ நன்றி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ மாவட்ட ஊராட்சி உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்‌, ஊராட்சித்தலைவர்‌ மற்றும்‌ ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 27-12-2019 அன்று முதல்‌ கட்டமாகவும்‌ 30-12-2019 அன்று இரண்டாம்‌ கட்டமாகவும்‌ தேர்தல்‌ நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ அமைதியான முறையில்‌ நடைபெற சிறப்பான முறையில்‌ பணியாற்றிய தேர்தல்‌ அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌, காவல்துறையினர்‌ மற்றும்‌ இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வாக்காளர்கள்‌, பொதுமக்கள்‌ என அனைவருக்கும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ நன்றி தெரிவித்துள்ளார்‌.

கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ 155 ஊராட்சி ஒன்றியக்‌ குழு உறுப்பினர்கள்‌ 228 ஊராட்சித்தலைவர்கள்‌ 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ என மொத்தம்‌ 2434 பேர்கள்‌ உள்ளாட்சி பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்‌. ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ வெற்றி பெற்ற அனைவருக்கும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்‌ 06-01-2020 அன்று அதற்கான இடங்களில்‌ பதவியேற்க உள்ளார்கள்‌. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கிலும்‌, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கிலும்‌, கிராம ஊராட்சி தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும்‌ பதவி ஏற்க உள்ளார்கள்‌. மேலும்‌ மாவட்ட ஊராட்சி தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌, ஆகிய பதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலும்‌, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும்‌, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்‌ பதவிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும்‌ 11-01-2020 அன்று மறைமுக தேர்தல்‌ நடைபெற உள்ளது," இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...