படுக இன மக்களின் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா; நீலகிரி மாவட்டத்துக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி: நீலகிரியில் படுக இன மக்களின் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரியில் படுக இன மக்களின் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா வருகிற 8-ம் தேதி (புதன்கிழமை) சிறப்பாக நடைபெறுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறி சட்டத்தின்கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இதற்கு பதிலாக வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதனால் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும். இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...