கோவையில் வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து முகாம் - மாநகராட்சி ஆணையர்‌

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

தேசிய போலியோ நோய்‌ ஒழிப்புத்திட்டத்தின்‌ கீழ்‌ கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாநகராட்சியின்‌ சார்பில்‌ போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 7.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்‌. இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள்‌, மருந்தகங்கள்‌, சத்துணவுக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதியிலுள்ள அனைத்து தனியார்‌ மருத்துவமனைகள்‌ ஆகியவற்றில்‌ அன்று பிறந்த குழந்தைகள்‌ முதல்‌ 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும்‌ குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும்‌ வகையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌, இரயில்‌ நிலையம்‌, 5 பருந்து நிலையங்கள்‌ மற்றும்‌ 5 நடமாடும்‌ ஊர்திகள்‌ ஆகியவற்றில்‌ சிறப்பு முகாம்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரப்‌ பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்‌ வழங்கப்படவுள்ள போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும்‌ பாதுகாப்பானது ஆகும்‌. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகரில்‌ வசிக்கும்‌ அனைத்து பொதுமக்களும்‌ தங்களின்‌ 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌, எந்த விதமான நோய்வாய்ப்பட்டிருந்தாலும்‌, அதனைக்‌ கருத்தில்‌ கொள்ளாமல்‌ தவறாமல்‌ அனைத்து குழந்தைகளுக்கும்‌ போலியோ நோய்த்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி நமது மாநகராட்சிப்‌ பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...