பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர்‌ - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்‌ - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர்‌ - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்‌ இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர்‌ - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்‌ இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தென்மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாட பயணத்தை எளிதாக்க தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் கோவை - ராமேஸ்வரத்திற்கு விட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்று வருகிற 14ம் தேதி கோவையில் இருந்து ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூர்‌ - ராமேஸ்வரம் இடையிலான சிறப்பு ரயில்‌ கோயம்புத்தூரிலிருந்து ஜனவரி 14 மற்றும் ஜனவரி 15ம் தேதிகளில் காலை 9:45 மணிக்கு புறப்பட்டு மாலை 6:45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்‌.

அதேபோல, ராமேஸ்வரம் - கோயம்புத்தூர்‌ இடையிலான சிறப்பு ரயில்‌ ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 15 மற்றும் ஜனவரி 17ம் தேதிகளில் காலை 8.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை வந்து சேரும்‌.

இந்த சிறப்பு ரயில்கள்‌ கோவை, போத்தனுர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஓட்டஞ்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ நின்று செல்லும்‌ என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், உடனடியாக கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்‌ இயக்க உத்தரவிட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...