கோவையில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கோவையில் வரும் 16 மற்றும் 26ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவையில் வரும் 16 மற்றும் 26ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் வரும் 16.01.2020 (வியாழக்கிழமை) - திருவள்ளுவர்‌ தினம்‌ மற்றும்‌ 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம்‌ ஆகிய இரு தினங்களும்‌ Dry Days எனக்‌ கடைபிடிப்பதால்‌ மதுக்கடைகள்‌ மற்றும்‌ மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச்‌ சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள்‌ மீதும்‌ சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...