அவ்வையார் விருது பெற பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்பு - கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டம்‌, அவ்வையார்‌ விருது வழங்கிட பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அறிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, அவ்வையார்‌ விருது வழங்கிட பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அறிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-

பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு 2019-20ஆம்‌ ஆண்டில்‌ உலக மகளிர்‌ தினவிழா 08.03.2020 அவ்வையார்‌ விருது வழங்கிட சிறந்த சேவை புரிந்த பெண்களிடம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்‌ 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்‌, சமூக நலனைச்‌ சார்ந்த நடவடிக்கைகள்‌ பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும்‌ வகையிலான நடவடிக்கை மொழி, இனம்‌, பண்பாடு, கலை அறிவியல்‌, நிர்வாகம்‌ போன்ற துறைகளில்‌ மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும்‌ வகையில்‌ தொடர்ந்து பணியாற்றுபவராகவும்‌, இருக்கவேண்டும்‌. படிவம்‌ முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்‌ (தமிழ்‌ வானவில்‌ அவ்வையார்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌) தகுந்த படிவம்‌ மாவட்ட சமூக அலுவலகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்‌, விண்ணப்பதாரர்‌ பெண்களின்‌ முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம்‌ 1 பக்க அளவில்‌ தமிழ்‌(வானவில்‌ அவ்வையார்‌) மற்றும்‌ ஆங்கிலத்தில்‌(Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும்‌. விண்ணப்பதாரரின்‌ கருத்துரு (Booklet)-2 (தமிழ்‌ 1, ஆங்கிலம்‌ 1) மற்றும்‌ கடவுச்சீட்டு புகைப்படம்‌(Photo) ஆகியவை கருத்துக்கள்‌ அனுப்புவதற்கான விதிமுறைகளாகும்‌.

மேற்படி தகுதி வாய்ந்த பெண்கள்‌ விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர்‌, மாவட்ட சமூகநல அலுவலகம்‌, பழைய கட்டிடம்‌(தரைதளம்‌), மாவட்ட ஆட்சியரகம்‌ கோயம்புத்தூர்‌ முகவரிக்கு அனைத்து சான்று விவரங்களுடன்‌ உரிய படிவத்தில்‌ பூர்த்தி செய்து 20.01.2020 அன்று மாலை 5 மணிக்குள்‌ சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...