நபார்டு வங்கியின்‌ அடுத்த நிதி ஆண்டுக்கான வளன்‌ சார்‌ கடன்‌ திட்ட அறிக்கையினை கோவை மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்டார்‌

கோவை: கோவை மாவட்டம்‌ நபார்டு வங்கியின்‌ அடுத்த நிதி ஆண்டுக்கான வளன்‌ சார்‌ கடன்‌ திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசமணி வெளியிட்டார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌ நபார்டு வங்கியின்‌ அடுத்த நிதி ஆண்டுக்கான வளன்‌ சார்‌ கடன்‌ திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசமணி வெளியிட்டார்‌.

கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நபார்டு வங்கியின்‌ அடுத்த நிதி ஆண்டுக்கான வளன்‌ சார்‌ கடன்‌ திட்ட அறிக்கை தொடர்பான கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம்‌ இயக்க திட்ட இயக்குநர்‌ கு.செல்வராசு, நபார்டு வங்கியின்‌ மாவட்ட வளர்ச்சி மேலாளர்‌ வி.இசக்கிமுத்து மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ நபார்டு வங்கியின்‌ அடுத்த நிதி ஆண்டுக்கான வளன்‌ சார்‌ கடன்‌ திட்ட அறிக்கையினை வெளியிட்டார்‌. முதல்‌ பிரதியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்‌ எஸ்‌.வெங்கட்ராமன்‌ பெற்றுக்கொண்டார்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ பேசுகையில்‌, கோவை மாவட்டத்தில்‌ விவசாயம்‌ மட்டுமின்றி சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்களுக்கும்‌ மிக அதிக வாய்ப்புகள்‌ உள்ளன என்றும்‌, வங்கிகளின்‌ சேவை இத்துறைகளின்‌ வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வங்கிகள்‌ ஒருங்கிணைந்த பண்ணையம்‌ மற்றும்‌ நவீன தொழில்நுட்பங்கள்‌ கொண்ட விவசாயம்‌ போன்ற திட்டங்களுக்கும்‌ தாமாக முன்வந்து கடன்‌ உதவி செய்ய வேண்டும்‌.

நிகழ்‌ஆண்டை காட்டிலும்‌ வரும்‌ ஆண்டிற்கான நிதி ஆற்றல்‌ 5.70% உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த நிதி ஆற்றல்‌ ரூ.20556.34கோடியில்‌, வேளாண்‌ மற்றும்‌ இணை தொழில்களுக்கு 37.09 சதவீதமும்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்த தொழில்களுக்கு 43.99 சதவீதமும்‌, இதர தொழில்களுக்கு 18.92 சதவீதம்‌ பங்கும்‌ இருக்கும்‌. நபார்டு வங்கியின்‌ திட்டத்தை அடிப்படையாக கொண்டு வங்கிகளுக்கான கடன்‌ திட்டத்தை முன்னோடி வங்கி தயார்‌ செய்யும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...