கரோனா வைரஸ் எதிரொலி:- கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு

கரோனா வைரஸ் எதிரொலி:- கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு

கோவை: à®šà¯€à®©à®¾à®µà®¿à®²à¯ வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் இருக்க  à®šà¯à®•ாதத்துறை சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

சீனாவின், வூஹான் நகரில் கரோனா வைரஸ் தாக்குதலால் 100க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சீனாவில் இருந்து கோவை விமானம் நிலையத்துக்கு 8 பேர் வந்தனர். அவர்களைப் பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், 8 பேரும் அடுத்த 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் எதிரொலியாக 25 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதை தொடர்ந்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...