வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்!‌

கோவை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும்‌ கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும்‌ தமிழக அரசால்‌ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கோவை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும்‌ கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும்‌ தமிழக அரசால்‌ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சியற்றவர்களுக்கு ரூ.200/-, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ்‌-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/-, பட்டதாரி மற்றும்‌ முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,/- மாதந்தோறும்‌ வழங்கும்‌ திட்டம்‌ அமலில்‌ உள்ளது.

இந்த உதவித்தொகையைப்‌ பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல்‌ காத்திருப்போர்‌ பட்டியலில்‌ இருப்பவராக இருக்க வேண்டும்‌. மாதந்தோறும்‌ வழங்கும்‌ திட்டம்‌ அமலில்‌ உள்ளது.

மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்‌. பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சியற்றவர்களுக்கு,//தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,-, பிளஸ்‌-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750,-, பட்டதாரி மற்றும்‌ முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 மாதந்தோறும்‌ வழங்கும்‌ திட்டம்‌ அமலில்‌ உள்ளது.

2019-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 31-ம்‌ தேதியன்று ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ 45 வயதிற்கு மிகாமலும்‌ மற்றவர்கள்‌ 40 வயதிற்கு மிகாமலும்‌ இருக்க வேண்டும்‌.

மனுதாரரின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூபாய்‌ 72,000,-க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்று திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

மனுதாரர்‌ பள்ளி அல்லது கல்லூரிப்‌ படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள்‌ வசித்தவராக இருக்க வேண்டும்‌. மனுதாரர்‌ முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்‌.

கல்வி நிறுவனத்திற்கு தினமும்‌ சென்று படிக்கும்‌ மாணவ மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால்‌ தொலைதூரக்கல்வி மற்றும்‌ அஞ்சல்‌ வழிக்கல்வி கற்கும்‌ மனுதாரர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மனுதாரர்‌ உதவித்தொகை பெறும்‌ காலங்களில்‌ வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவினைத்‌ தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்‌.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்‌ உடனடியாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ விளர்ணப்பப்படிவம்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ அல்லது https://tnvelaivaaippu.gov.in/ à®Žà®©à¯à®± இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என கோவை மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உதவித்‌ தொகை பெற்று வரும்‌ மனுதாரர்கள்‌, ஜனவரி 1 முதல்‌ மார்ச் 31-ம் தேதிக்குள்‌ நாளது தேதி வரை இருப்பு வைக்கப்பட்டு பயனாளிகள்‌ தங்களின்‌ சுய உறுதிமொழி ஆவணத்தை வங்கிக்‌ கணக்கு புத்தக நகல்‌ (Account No, MICR, IFSC Code) சரியான விவரங்களுடன்‌) மற்றும்‌ வேலைவாய்ப்பு பதிவட்டை நகலுடன்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பி வைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்‌. |

சுய உறுதிமொழி ஆவணப்‌ படிவத்தை https://employmentexchange.tn.gov.in/ à®Žà®©à¯à®± இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. சுய உறுதிமொழி ஆவணம்‌ சமர்ப்பிக்காதவர்களுக்கு உதவித்தொகைத்‌ தொடர்ந்து வழங்க இயலாது. எனவே, உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணத்தை தவறாது கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ அளிக்கவேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...