முன்மாதிரி விருது பெற தகுதியான மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை: 2020-ஆம்‌ ஆண்டிற்கான முன்மாதிரி விருது பெற தகுதியான மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: 2020-ஆம்‌ ஆண்டிற்கான முன்மாதிரி விருது பெற தகுதியான மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது;-

2020ம்‌ ஆண்டு முதல்‌ மூன்றாம்‌ பாலினர்களில்‌ சிறப்பாக முன்னேறியவர்களில்‌ ஒருவருக்கு முன்மாதிரி விருது திருநங்கையர்‌ தினமான ஏப்ரல-15 அன்று வழங்குவதற்கு தகுதியான மூன்றாம்‌ பாலினத்தவர்களிடமிருந்து கருத்துக்கருக்கள்‌ வரவேற்கப்படுகிறது. மேலும்‌, இவ்விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும்‌ சான்று ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.

மூன்றாம்‌ பாலினர்கள்‌ அரசு உதவி பெறாமல்‌ தானாக சுயமாக வாழ்க்கையில்‌ முன்னேறி இருத்தல்‌ வேண்டும்‌. குறைந்தது 5 மூன்றாம்‌ பாலினருக்காவது அவர்கள்‌ வாழ்க்கையில்‌ முன்னேற உதவியிருக்க வேண்டும்‌. மூன்றாம்‌ பாலினர்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக இருக்கக் கூடாது. மேற்காணும்‌ தகுதிகள்‌ உடைய திருநங்கையர்‌ 2020-ம்‌ ஆண்டு திருநங்கையர்‌ தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்‌.

மேற்படி இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும்‌ மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ உரிய கருத்துருக்களுடன்‌ 07.02.2020 அன்று மாலை 5 மணிக்குள்‌ மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்‌ செயல்படும்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தில்‌ கருத்துருக்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...