அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ சேவையை பயன்படுத்தி கொள்ள விழிப்புணர்வு மற்றும்‌ சிறப்பு பதிவு முகாம்‌ - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ சேவையை பயன்படுத்திக்‌ கொள்வதற்கு ஏதுவாக விழிப்புணர்வு மற்றும்‌ சிறப்பு பதிவு முகாம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: à®…யல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ சேவையை பயன்படுத்திக்‌ கொள்வதற்கு ஏதுவாக விழிப்புணர்வு மற்றும்‌ சிறப்பு பதிவு முகாம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது ;-

தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்‌ கடந்த 40 வருடங்களுக்கும்‌ மேலாக பல்வேறு பிரிவுகளில்‌ ஆயிரக்கணக்கான மனுதாரர்களை அயல்நாடுகளில்‌ பணியமர்த்தி வருகிறது. தற்போது இங்கிலாந்து மற்றும்‌ அயர்லாந்து நாடுகளில்‌ பணிபுரிவதற்கு ஏதுவாக Diploma and B.Sc Degree (Male/Female) செவிலியர்களுக்கு IELTS பயிற்சி அளித்து பணியமர்த்த இந்நிறுவனம்‌ ஏற்பாடு செய்து வருகிறது. மாத சம்பளம்‌ ரூ.2 லட்சம்‌ முதல்‌ ரூ.2.5 லட்சம்‌ வரை கிடைக்கும்‌.

மேலும்‌ குவைத்‌ நாட்டில்‌ பணிபுரிய பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது ECNR PASSPORT உள்ள 25 வயது முதல்‌ 45 வயதிற்குட்பட்ட செல்லத்தக்க அரபு நாட்டு ஓட்டுனர்‌ உரிமம்‌ பெற்ற இலகுரக வாகன ஓட்டுநர்கள்‌ (Light Vechile Driver) சமையலர்கள்‌ - அரபு உணவு வகைகள்‌ (Male House Cook) மாத ஊதியம்‌ ரூ.25,000 முதல்‌ ரூ.32,000 வரை மற்றும்‌ 31 வயது முதல்‌ 45 வயதுக்குட்பட்ட வீட்டு வேலை செய்யும்‌ பெண்‌ பணியாளர்கள்‌ (House Maid) பெருமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாத ஊதியம்‌ ரூ.25,000 முதல்‌ ரூ.28,500 வரை மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உணவு, இருப்பிடம்‌, விமான பயணச்சீட்டு, மருத்துவ சலுகை ஆகியவைகள்‌ குவைத்‌ நாட்டின்‌ வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌.

ஓமன்‌ நாட்டில்‌ உள்ள ஒரு முன்னணி தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிய 21 வயது முதல்‌ 35 வயதுக்குட்பட்ட Electrician, Electrical Technician & OH Lineman, Plumber, Carpenter, Fitter, Mason பெருமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாத ஊதியம்‌ தகுதி மற்றும்‌ அனுபவத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படும்‌

எனவே, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ சேவையை பயன்படுத்திக்‌ கொள்வதற்கு ஏதுவாக இந்நிறுவனம்‌ விழிப்புணர்வு மற்றும்‌ சிறப்பு பதிவு முகாம்‌ 08.02.2020 (சனிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மேட்டுப்பாளையம்‌ ரோடு, துடியலூர்‌ கோயம்புத்தூர்‌ 641 029 அலுவலகத்தில்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.

பதிவு கட்டணமாக லேபர்‌, கொத்தனார்‌, கார்பென்டர்‌, பிட்டர்‌, பிளம்பர்‌, பெயின்டர்‌, ஐடிஐ, டிப்ளமோ, தொழில்‌ அனுபவம்‌ பெற்றவர்கள், ஹோட்டல்‌ பணியாளர்கள்‌, இளநிலை பட்டப்படிப்பு ரூ.590/-ம்‌ முதுநிலை பட்டதாரிகள்‌, இன்ஜினியரிங்‌ பட்டப்படிப்பு, நர்ஸ்‌, பாரா மெடிக்கல்‌ டெக்னீசியன்கள்‌ ரூ.1003-ம்‌ மற்றும்‌ அலோபதி மருத்துவர்கள்‌ ரூ.1770/-ம்‌ செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌ இறுதி ஆண்டு பயிலும்‌ இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பதிவு கட்டணம்‌ ரூ.150,/-ம்‌, முதுநிலை பட்டதாரிகள்‌, இன்ஜினியர்கள்‌, நர்ஸ்‌, பாராமெடிக்கல்‌, டெக்னீசியன்கள்‌ மாணவர்களுக்கு பதிவு கட்டணம்‌ ரூ.400/-ம்‌ மற்றும்‌ அலோபதி மருத்துவ பிரிவுகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு ரூ.500/-ம்‌ செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்‌. இச்சிறப்பு பதிவு முகாமில்‌ பதிவு செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ தங்களின்‌ சுய விவரங்கள்‌ அடங்கிய விண்ணப்பத்துடன்‌ கல்வி அனுபவம்‌ பாஸ்போர்ட்‌ ஆகியவற்றின்‌ நகல்கள்‌ மற்றும்‌ ஒரு புகைப்படத்துடன்‌ வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இப்பணிகள்‌ தொடர்பான விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம்‌ www.omcmanpower.com மற்றும்‌ 044- 22505886, 22502267, 8220634389, 9566239685 என்ற தொலைபேசி எண்களில்‌ அறிந்து கொள்ளலாம்‌. இந்திய அரசின்‌ வெளிநாட்டு வாழ்‌ இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால்‌ வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ முகவர்‌ எண்: RC.NO.B-082 1/CHENNAI/CORPN/1000+5/308/84 ஆகும். இம்முகாமில்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பெருமளவில்‌ கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...