உதகை கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் செல்ல தடை - மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆபத்து நிறைந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கல்லட்டி நீர் வீழ்ச்சி போதிய பராமரிப்பின்றி காணப்படும் இந்த நீர்வீழ்ச்சியினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்த நிலையில், உதகை எல்க் ஹில் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.



தொடர்ந்து கல்லட்டி நீர்வீழ்ச்சியில் விபத்துக்கள் ஏற்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். விபத்து நடந்தபாேது தாற்காலிகமாக மூடப்பட்ட கல்லட்டி நீர் வீழ்ச்சி செல்லும் 

பாதை, தற்பாேது நிறந்தரமாக மூடப்பட்டுள்ளது. 



பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டு நோ என்ட்ரி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தடையை மீறுபவர்கள் மீது அபராதங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...